பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், இபிஎஸ் வாழ்க என கோஷமிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 60ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சியில், 30-ஆம் தேதி […]

பழங்குடி நலவாரிய உறுப்பினர்களுக்கான விபத்து, கல்வி உள்ளிட்ட நலத்திட்ட உதவித்தொகைகளை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித் தொகை, இதர நல வாரியங்களால் வழங்கப்படும் உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்தார். இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரிய […]

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் கலைபுலி எஸ்.தாணு சமீபத்தில் இவரது தயாரிப்பில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை தாணு தயாரித்து வருகிறார். இவர் சினிமா மட்டுமல்லாமல் பலருக்கு உதவிகளை செய்து வருவது வழக்கம். அந்த வகையில், சென்னை காவேரி மருத்துவமனையில் 33 வயதுடைய பெண் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். […]

சென்னையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, தேர்வுக்கு பயந்து மாணவனே கடத்தல் நாடகமாடியிருப்பது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னை கொண்டித்தோப்பை சேர்ந்த அரவிந்த் ஷர்மா என்பவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது 12 வயது மகன் மிதிலேஷ் குமார், கீழ்பாக்கம் தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், அவரை வழக்கம் போல ஆட்டோவில் அழைத்து வரும் ஓட்டுநர், பள்ளி […]

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் வத்தலகுண்டு அருகே பாலமுருகன் என்பவர் ஒத்தப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இவரது முதல் மகள் நாக பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் உடன் இரண்டு ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு இருக்கின்றது. சின்னசாமி பெங்களூரில் இருக்கும் ஒரு ஐடி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். […]

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத்-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் துணிவு. இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வீரா, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி, சிபி ஆகியோரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். […]

பெண்கள் தங்களுக்கு வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லை என்பதை திருமணத்துக்கு முன்பே சொல்லிவிட வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் விபா கன்கன்வாடி மற்றும் ராஜேஷ் எஸ்.படீல் ஆகியோர் அமர்வில் வந்த வழக்கொன்றில், பெண்ணொருவர் தன் கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தன்னை மிகமோசமாக துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் அப்பெண், தனக்கு திருமணமான ஒரு மாதத்துக்கு பின்னிருந்து கணவர் குடும்பத்தார் கார் வாங்க […]

இந்தோனேஷியா பகுதியில் பல்வேறு வகை மலை பாம்பு இனங்கள் வசித்து வருகின்ற நிலையில், இந்த மலைப்பாம்புகள் அவற்றின் பாதைகளில் சுற்றி திரியும் பகுதிகளில் குழந்தைகள், விலங்குகள் மற்றும் நபர்கள் இருந்தாலும் அப்படியே அவர்களை விழுங்கி விடும் அளவிற்கு ஆபத்தானவை. இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் இந்தோனேசியாவின் பல பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. அதில் ஒரு வருத்தமடைய வைக்கும் நிகழ்ச்சியாக, ஜாம்பி என்ற பகுதியில் ஜஹரா எனும் தோட்ட வேலை செய்யும் பெண்மணி வசித்து […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்திற்கு அருகில் ஒரு பொது கழித்துறை இருந்தது. இந்த கழிப்பறைக்கு அருகில் ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் நடைபாதையில் வசித்து வருகின்றார். கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அந்தப் பெண் தனது மூன்று குழந்தைகளுடன் நடைபாதையில் படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை கண்விழித்து பார்த்தபோது அருகில் படுத்து உறங்கிய இரண்டு மாத குழந்தை காணாமல் போனது. இது பற்றி அக்கம் பக்கத்தில் அவர் […]

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 24,369 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். காலியாக உள்ள பணியிடங்களின் விவரம்… எல்லை பாதுகாப்பு படை – 10,497 மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை – 100 மத்திய ரிசர்வ் போலீஸ் படை – 8,911 எஸ்.எஸ்.பி. – 1,284 தகவல் […]