நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. அதற்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த குமரி, பலவகையிலும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தது. தியாகம், உயிரிழப்பு, மாபெரும் போராட்டங்கள் என ஏராளமான வரலாறுகளும் அதன்பின்னால் இருக்கிறது. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்னர், தாய் தமிழகத்தோடு குமரி இணைந்து 66 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது. தமிழகத்தின் […]

தனியார்‌ துறை நிறுவனங்களும்‌ – தனியார்‌ துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துக்கொள்ளும்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌ ஒவ்வொரு மாதத்தின்‌ இரண்டாம்‌ மற்றும்‌ நான்காம்‌ வெள்ளிக்கிழமைகளில்‌ நடைபெறுகிறது .எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்குத்‌ தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்‌. இது ஒரு இலவசப்பணியே ஆகும்‌. இதன்‌ மூலம்‌ தனியார் துறையில்‌ வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத்துறைகளில்‌ அவர்களது பதிவு […]

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகத் தமிழக அரசு கடந்த 19-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் புதிய அபராத தொகை விதிக்கும் நடைமுறை நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. புதிய மோட்டார் வாகன […]

சென்னையில் தலைமைச் செயலகம் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் எல்லாம் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் வியூ காட்சிகள் என இன்றைய தலைமுறையினர் முக்கிய இடங்களில் மட்டுமின்றி பல பகுதிகளை ட்ரோன்கள் மூலம் பதிவு செய்கின்றனர். இந்நிலையில் ட்ரோன்களை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகம் , விமான நிலையங்கள் , நீதிமன்றங்கள் போன்ற இடங்களில் அனுமதி இன்றி ட்ரோன் பறக்க விடப்பட்டால் கடும் நடவடிக்கை […]

24 வயது பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளப்போகும் பப்லு பிரித்விராஜ் காதலிக்க வயது தடையில்லை என்று யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். சென்னையை சேர்ந்த பிரித்விராஜ் பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்களை கவர்ந்தவர். மர்மதேசம்  போன்ற பிரபல சீரியல் மூலம் இவர் பிரபலமானார். 1971ம் ஆண்டு நான்கு சுவர்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதையடுத்து சிவாஜி , ரஜினி போன்ற நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். மேலும் […]

அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டு குறித்து பேசியபோது நாய், பேய், சாராய வியாபாரிக்கெல்லாம் தன்னால் பதிலளிக்க முடியாது என அண்ணாமலை விமர்சித்தார். தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”திமுகவின் இந்தி எதிர்ப்பு […]

தேசிய புலனாய்வு முகமை முதலில் பா.ஜ. மாநிலத் தலைவர் அண்ணாமலையை விசாரியுங்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். கோவை கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து சட்டம் ஒழுங்கு தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மின்சாத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடபெற்ற இந்த கூட்டத்தில் ஆட்சியர் சமீரன் , மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இதன் பின்னர் […]

இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒரே மாதிரியான சம ஊதியம் வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஊதியத்தில் வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. இந்தச் சூழலில் தனது அறிவிப்பின் மூலம் அனைவருக்கும் ஒரே மாதிரியான சம ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த ஜூலை […]

பிரபல பாலிவுட் இயக்குநர் இஸ்மாயில் ஷெராஃப் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 65. பாலிவுட்டில் அஹிஸ்தா அஹிஸ்தா, புலந்தி, தோடி சி பேவபாய், சூர்யா போன்ற பல படங்களை இயக்கியவர் பழம்பெரும் திரைப்பட இயக்குநர் இஸ்மாயில் ஷெராஃப். இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்தார். மறைந்த இயக்குநருக்கு நடிகர்கள் கோவிந்தா, பத்மினி […]

பிரதமர் மோடியின் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஒருவர் வலியுறுத்தியுள்ளார். புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்கள் இடம்பெற வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்திருந்தார். அவர், பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரது உருவங்களை இடம்பெற செய்ய வேண்டும் என மத்திய அரசையும், […]