தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் ராம லக்ஷ்மணன் என்பவருக்கு பூபதி ராஜா என்ற 28 வயது மகன் இருந்துள்ளார். இந்த மகன் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு தற்போது தனியார் பவர் பிளான்ட் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த பூபதி ராஜாவுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடுகின்ற பழக்கம் இருந்தது. தமிழகத்தில் ரம்மி விளையாட்டு தடை செய்யப்படுவதற்கு முன்பு பூபதி ராஜா இந்த விளையாட்டின் மூலம் நிறைய […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பள்ளி மாணவியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில், மாணவியின் தலை காணாமல் போன அதிர்ச்சி சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதைப் பார்த்த ஊர் பொது மக்கள் இச்செய்தியை காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து போலிசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். புதைக்கப்பட்ட சிறுமியின் தலை மட்டும் துண்டிக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் சித்திரவாடி கிராமத்தைச் சோந்தவர் பாண்டியன். இவரின் […]
கோவை கார் வெடிப்பு சம்பவ வழக்கில் முபின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட்டை உள்ளிட்ட பொருட்களை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இணையதளங்களில் வாங்கியது தெரியவந்துள்ளது. கடந்த 23ஆம் தேதி அன்று அதிகாலையில் கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பாக திடீரென்று கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த வாலிபர் பலியானார். போலீசாரின் விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த முபின் (29) […]
பிரதமர் மோடி குஜராத் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார் , அப்போது அங்கு குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேலுக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் பரவி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது. விரைவில் குஜராத் மாநிலத்தில் சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளையும் அவர் அறிவித்து வருகின்றார். இத்தகைய நிலையில், குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் […]
நாட்டில் ஆதார் அட்டை என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கிக் கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி, வங்கியில் கடன் வாங்குவதற்கு கூட ஆதார் அட்டை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை பல மாற்றங்களை செய்து அவ்வபோது புதுப்பிக்க வேண்டும். தற்போது அனைத்து சேவைகளுக்கும் பயன்படும் ஆதார் கார்டை வைத்து […]
காரில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் குடும்பமே பலியான சம்பவம் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியை சேர்ந்த தங்கசாமி தன்னுடைய குடும்பத்தினருடன் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த , நவல்பட்டில் உள்ள மகள் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மணப்பாறையின் அருகே கார் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்தது. அதனால் , சாலைத் தடுப்பைத் தாண்டி […]
மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தடுக்காமல், வீடியோ எடுத்து ரசித்த கணவன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜ் கிஷோர் குப்தா. இவரது மகள் சோபிதா குப்தா. குல்மோஹரில் வசிக்கும் சஞ்சய் குப்தா என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் சோபிதா. இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. […]
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். IOB வங்கியில் Office Assistant, Faculty & Attender பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் 10 அல்லது 12-ம் […]
தமிழகத்தில் செயலி மூலம் செய்யப்படும் இருசக்கர, ஆட்டோ, கேப் முன்பதிவுகளை ஓட்டுநர்கள் ரத்து செய்தால் ரூ.50 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் டாக்சி, ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகள் ஆன்லைனில் பணம் செலுத்தினால் ஓட்டுநர்கள் முன்பதிவை ரத்து செய்வதாகவும், நகரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு சவாரி செய்வதை ரத்து செய்வதாகவும் பல புகார்கள் எழுந்தது. இந்நிலையில், […]
முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நாளில், ஆண்டுதோறும் அரசு சார்பில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம். இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் […]