தருமபுரி மாவட்டத்தில்‌ விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நாளை காலை 11.30 மணியளவில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தைச்‌ சார்ந்த விவசாயிகள்‌ கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இக்கூட்டத்தில்‌ கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது கோரிக்கைகளையும்‌, கருத்துகளையும்‌ தெரிவித்து பயன்பெறலாம்‌. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ விவசாயிகள்‌ சூறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌வருகின்ற 27.10.2022 […]

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சமீபத்தில் தனது வாழ்க்கை குறித்து ‘சதியின் பத்ம வியூகம்’ என்ற ஒரு சுயசரிதை புத்தகத்தை எழுதினார். அப்புத்தகத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன், பினராயி குடும்பத்தினர், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மற்றும் பினராய் விஜயனின் அலுவலகத்தை சேர்ந்த சில முக்கிய நபர்கள் மீது பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கடகம்பள்ளி சுரேந்திரன், […]

சர்வதேச போலீசுக்கு சவால் விட்டு பாலியல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா, திருப்பாச்சி பட இயக்குனர் பேரரசுவை, Zoom மீட்டிங்கில் சந்தித்து, தர்மரட்சகர் விருது வழங்கி உள்ளார். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி, சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்து, குறுக்கு மறுக்காக கருத்து சொல்லி வந்தவர் திருப்பாச்சி பட இயக்குனர் பேரரசு. ராஜராஜ சோழன் இந்து மன்னனாக அடையாளப்படுத்துகிறார் என்ற இயக்குனர் வெற்றிமாறனுக்கு எதிராக பொங்கி எழுந்த, […]

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பதவியேற்கவுள்ளார். கடந்த அக்டோபர் 17ஆம் தேதி அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்ற இத்தேர்தலில் சசிதரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவரும் நேரடியாக போட்டியிட்டிருந்தனர். தேர்தலின் வாக்குப்பதிவுகள் 17ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அக்டோபர் 19ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer & Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என 34 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதிற்குள் இருக்க […]

அயோத்தி ராமர் கோயில் கருவறையில் ராம் லல்லா சிலை நிறுவப்பட்ட பிறகு, ஜனவரி 2024 இல் மகர சங்கராந்தியின் போது அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறக்கப்படும். 1,000 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் அளவுக்கு பூகம்பத்தை எதிர்க்கும் வகையில் உறுதியானதாக கோவில் இருக்கும். இந்தத் தகவலை ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் பகிர்ந்துள்ளார். 1,800 கோடி செலவில் கட்டப்படும் இக்கோயில், 50 சதவீத […]

ஏற்றுமதியாளராக வேண்டும் என்ற கனவுடன் வலம் வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அற்புத வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. எனவே, ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்ட […]

ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்பு வைத்துள்ள வீடுகளை ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்கட்டண உயர்வு கடந்த மாதம் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. வீடுகளுக்கான மின்கட்டணம் 12 % முதல் 52% வரை உயர்த்தப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட் ரூ.8 என நிர்ணயிக்கப்பட்டது. மேலும் ஒரு வீட்டுக்கு ஒரு இணைப்புக்கு மேல் மின்இணைப்பு இருந்தால், ஒரே இணைப்புக்கு […]

காதலித்து வந்த பெண் திடீரென திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், ஆத்திரமடைந்த காதலன் அந்தப் பெண் உட்பட 11 பேரை சரமாரியாக தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ஃபிரங்கிபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த பிரகாசம் பந்துலு தெருவைச் சார்ந்த மணிகண்டன் (23) என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் மணிகண்டனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் திடீரென […]

தமிழகத்தில் இன்று 18 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கடலோர […]