பருவமழையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளால் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகள், அடையாளப் பலகைகள் வைக்க தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார் . இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில்; பருவமழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில இடங்களில் […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நவம்பர் 19ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். நவம்பர் 19 ஆம் தேதி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்களால் அகில இந்திய வங்கி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதும் நடைபெறும் போராட்டத்தின் போது நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும். வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், தொழிற்சங்கத்தில் செயலில் ஈடுபட்டதற்காக வங்கியாளர்கள் இலக்கு வைக்கப்படுவதை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தெரிவித்தனர். இது […]
உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள் என குடிமக்களுக்கு இந்திய தூதரகம் புதிய ஆலோசனைகளை வழங்கி உள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம், கிடைக்கக்கூடிய வழிகளில் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு தங்களுடைய நாட்டு குடி மக்களுக்கு புதிய ஆலோசனையை வழங்கியது. அக்டோபர் 19 அன்று வெளியிடப்பட்ட முந்தைய ஆலோசனையைத் தொடர்ந்து சில இந்தியர்கள் ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்று ஆலோசனை மேலும் கூறியது. இது குறித்து […]
சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பது போல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். இனி இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார்களில் வாகன ஓட்டுநர் குடித்து இருந்தால் அவர்களுடன் பயணம் […]
இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளும் வழக்கம்போல இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் சொந்த ஊர்களை நோக்கிக் சென்றனர். பலரும் சொந்த ஊருக்கு கிளம்பியிருப்பதால் போக்குவரத்து வசதியில் பாதிப்புகள் இருக்கும், இதனால் பயணத்தில் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதால் பல தரப்பிலிருந்து தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அண்டை மாநிலமான […]
தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் ஊராட்சி, நகராட்சி , மாநகராட்சி உள்ளிட் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக 2,760 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கிஅரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.துகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், […]
மும்பையில் மைனர் பெண்ணை ITEM என அழைத்த நபருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி 16 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அங்கு அமர்ந்திருந்த 25 வயது தொழிலதிபர் அந்த சிறுமியின் பின்னால் சென்று சிறுமியின் தலை முடியை இழுத்து தகாத வார்த்தையால் திட்டியதாகவும் அந்த சிறுமியை […]
தீபாவளியான நேற்று தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்துகள் குறித்து தமிழ்நாடு தீயணைப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், தீபாவளி பண்டிகையன்று, பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை விரைந்து கையாளும் வகையில் தமிழகத்தில் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில் 6,673 வீரர்கள் தயார் நிலையில் இருந்து பெரிய தீவிபத்து சம்பவங்களை […]
உயிரோடு புதைக்கப்பட்ட பெண், தனது கையில் இருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகள் உலகளவில் அறிமுகமாகி வருகிறது. அந்த வகையில், மெசேஜ்கள், நோட்டிபிகேஷன், தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஸ்மார்ட்வாட்ச் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதேநேரம் ஸ்மார்ட்வாட்ச் தற்போது ஒரு பெண்ணின் உயிரையும் காப்பாற்றியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் வசிக்கும் 42 வயதான யங் சூக் அன் […]
செல்போனை சிம் கார்டுடன் சர்வீஸ் செய்ய கொடுத்துச் சென்ற நபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் கதம் (40). இவர் வைத்திருந்த செல்போனில் சில நாட்களாக ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதனால், அதனை சரி செய்ய அந்த பகுதியில் இருந்த தனக்கு அறிமுகமில்லாத கடையில் பழுதுநீக்குவதற்காக கொடுத்துள்ளார். அந்த கடையில் இருந்தவர் மறுநாள் […]