இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளும் வழக்கம்போல இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் சொந்த ஊர்களை நோக்கிக் சென்றனர். பலரும் சொந்த ஊருக்கு கிளம்பியிருப்பதால் போக்குவரத்து வசதியில் பாதிப்புகள் இருக்கும், இதனால் பயணத்தில் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதால் பல தரப்பிலிருந்து தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அண்டை மாநிலமான […]

தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் ஊராட்சி, நகராட்சி , மாநகராட்சி உள்ளிட் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக 2,760 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கிஅரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.துகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், […]

மும்பையில் மைனர் பெண்ணை ITEM என அழைத்த நபருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி 16 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அங்கு அமர்ந்திருந்த 25 வயது தொழிலதிபர் அந்த சிறுமியின் பின்னால் சென்று சிறுமியின் தலை முடியை இழுத்து தகாத வார்த்தையால் திட்டியதாகவும் அந்த சிறுமியை […]

தீபாவளியான நேற்று தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்துகள் குறித்து தமிழ்நாடு தீயணைப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், தீபாவளி பண்டிகையன்று, பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை விரைந்து கையாளும் வகையில் தமிழகத்தில் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில் 6,673 வீரர்கள் தயார் நிலையில் இருந்து பெரிய தீவிபத்து சம்பவங்களை […]

உயிரோடு புதைக்கப்பட்ட பெண், தனது கையில் இருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகள் உலகளவில் அறிமுகமாகி வருகிறது. அந்த வகையில், மெசேஜ்கள், நோட்டிபிகேஷன், தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஸ்மார்ட்வாட்ச் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதேநேரம் ஸ்மார்ட்வாட்ச் தற்போது ஒரு பெண்ணின் உயிரையும் காப்பாற்றியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் வசிக்கும் 42 வயதான யங் சூக் அன் […]

செல்போனை சிம் கார்டுடன் சர்வீஸ் செய்ய கொடுத்துச் சென்ற நபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் கதம் (40). இவர் வைத்திருந்த செல்போனில் சில நாட்களாக ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதனால், அதனை சரி செய்ய அந்த பகுதியில் இருந்த தனக்கு அறிமுகமில்லாத கடையில் பழுதுநீக்குவதற்காக கொடுத்துள்ளார். அந்த கடையில் இருந்தவர் மறுநாள் […]

சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய வாட்ஸ் அப் செயலி தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றத்தில் மக்கள் மத்தியில் வாட்ஸ்அப் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்புவதற்கு வாட்ஸ் அப் செயலி பெரும் உதவியாக உள்ளது. அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு சாதனமாக வாட்ஸ் அப் விளங்குகின்றது. இந்நிலையில், […]

டாஸ்மாக் விற்பனை குறித்து பொய் தகவல் போட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த தொலைக்காட்சியை வறுத்தெடுத்த சம்பவம் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் தீபாவளி விற்பனை குறித்து தந்தி டி.வி. தகவல் வெளியிட்டது. அதில், ரூ708 கோடி வசூல் என தகவல் வெளியிட்டிருந்தது. இதையடுத்துஅந்த தகவல் பொய் என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தொலைக்காட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.தீபாவளி , பொங்கல் , ஆங்கில புத்தாண்டு போன்ற நாட்களில் வழக்கத்தை விட மது […]

கோலிவுட் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ரவீந்தர். தற்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்.நடிகை வனிதாவின் திருமணம் குறித்து தேவையற்ற கருத்துக்களை கூறி, அவரால் ஏற்பட்ட மோதலால் பிரபலமடைந்தவர் தான் தயாரிப்பாளர் ரவிந்தர். இவர் தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர். தனது லிப்ரா ப்ரோடுக்ஷன் சார்பில் இவர் ஒரு இசை ஆல்பத்தில் நடிக்க இருக்கிறார். இவர் சொந்தமாக ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். சமீபத்தில் தான் […]

உத்திரபிரதேச மாநிலத்தின் கண்ணஜ் பகுதியில் ஒரு 12 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் மூழ்கியவாறு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். அப்பொழுது அந்த சிறுமியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கவோ அவருக்கு உதவி செய்யவும் யாரும் முற்படாமல் கும்பல் கும்பலாக செல்போனில் படம் பிடித்த காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 வயதான அந்த சிறுமி நேற்று மாலை உண்டியல் வாங்குவதற்காக அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார். அதன் […]