ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கொரோனாவின் காரணமாக சில ஆண்டுகள் வீட்டில் இருந்தபடியே அவர் வேலை செய்து வந்திருக்கின்றார். இந்த நிலையில், தனது ஆண் நண்பருடன் நேற்று முன் தினம் மாலையில் பைக்கில் வெளியே சென்ற நிலையில், இவர்களை பின்தொடர்ந்து பத்து பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளனர். அப்போது நடுவழியில் இவர்களின் பைக்கை வழி மறித்து அந்த ஆண் நண்பரை அடித்து […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
திருவள்ளூர் மாவட்டத்தில் 7 அடி நிம்மாளியம்மன் மரச்சிலை தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. நிம்மாளியம்மன் கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை அருகே ஆதிவராகபுரம் கிராமத்தில் உள்ளது. இக்கோவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்த நிலையில் தினமும் காலை மட்டும் பூஜைகள் நடைபெற்று வந்திருக்கின்றன. நேற்று இரவு அம்மன் கோவிலின் கேட்டை நிர்வாகி கோவிந்தசாமி பூட்டிவிட்டு சென்றிருக்கிறார். அதன் பிறகு மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்த 7 அடி நிம்மாளியம்மன் மரச்சிலையை தீவைத்து […]
பிரபல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக உள்ளவர் இரா.முத்தரசன். 72 வயதான இவர் அரசியலில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய கம்யூனிஸ்ட் […]
முன்னாள் அமைச்சர்கள் என்னை படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் என்றும் எனது சுயசரிதையின் 2ஆம் பாகம், கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் சொப்னா தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா சமீபத்தில் ‘சதியின் பத்ம வியூகம்’ என்ற பெயரில் ஒரு சுயசரிதை எழுதினார். அதில், கேரள முதல்வர் பினராய் விஜயன், அவரது குடும்பத்தினர், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், சில முக்கிய […]
நோயை குணப்படுத்த நிர்வாண பூஜையை செய்யவேண்டும் என்று மருமகளை கட்டாயப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்யபாபு (36) என்பவருக்கும் 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சத்யபாபு குடும்பத்தினர் மூட நம்பிக்கைகளில் அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்துள்ளனர். திருமணம் முடிந்த 2 மாதத்தில் அவர்களது வீட்டிற்கு சில மந்திரவாதிகள் வந்து சத்யபாபு வீட்டில் தீய சக்தி இருக்கிறது என்றும், அதனை […]
மது போதையில் ஒரு நபர் போஸ்டரில் இருக்கும் நடிகைக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. மதுபோதையில் நம்ம ஊரு ஆசாமிகள் செய்யும் அட்ராசிட்டிக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அதனை நிரூபிக்கும் வகையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தீபாவளிக்கு டார்கெட் வைத்து அரசு டாஸ்மாக்கை இயக்கி வருகின்றது. இதற்கு தூணாக இருக்கும் குடிகார ஆசாமிகளின் அலப்பறைகள் தொடங்கிவிட்டதை இந்த சம்பவம் உறுதி செய்கிறது. நடிகர் கார்த்திக் […]
நாட்டு மக்கள் கவலைப்படாமல் முழு மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்படி ராணுவ வீரர் ஒருவர் கூறியுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் அக்னூர் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால், முடங்கி போயிருந்த தீபாவளி பண்டிகை இந்த முறை நாடு முழுவதும் பரவலாக கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அக்னூர் பிரிவின் கர்னல் இக்பால் […]
அனந்த நாடார் என்பவரது மகளான பத்மா கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள பள்ளவிளை கிராமத்தை சேர்ந்தவர். இவர் ஆண்டனி பெனிஸ்டர் என்கிற பரமார்த்தலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தம்பதியினர் இருவருக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தகராறு நடந்து வந்துள்ளது. இத்தகைய நிலையில், விவாகரத்து […]
சாரா நிக்கோல் என்ற பெண் அமெரிக்கா இந்தியானா மாகணத்தைச் சேர்ந்தவர். சாரா தனது கணவர் மற்றும் அவரது பழைய காதலருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். 8 ஆண்டுகளுக்கு முன்பு 39 வயதான சாரா, ரியான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். இருப்பினும், அவரது முன்னாள் காதலரான ரோனி மார்ச் 2020-ல், மீண்டும் […]
தீபாவளிக்கு மகளை அழைத்து வர சென்ற தாய் விபத்தில் பலியாகியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபேட்டையைச் சேர்ந்தவர் நடராஜன்(45). இவரது மனைவி ராதா(40), இவர்கள் இருவரும், ஊராட்சி துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். அவர்களது மகள், நாமக்கல் தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகின்ற நிலையில் தனது மகளை தீபாவளிக்கு அழைத்து வர காரில் சென்றபோது, கார் கவிழ்ந்தது. அந்த விபத்தில், பெண்ணின் தாயான அரசு துவக்கப்பள்ளி பெண் ஆசிரியர் […]