தமிழகத்தில் பெரும் ஒரு பிரச்சனையாக பேசப்படுவது மது மற்றும் போதை தான். அடுத்த 6 மாதத்திற்குள் போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு உறுதியாக தெரிவித்திருக்கிறார். தற்போது, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் உள்ள பொருட்கள் மீட்கப்பட்டு அந்த அந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனை பாராட்டி இங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள், தமிழகத்தில் விரைவில் அனைத்து போலீஸ் […]

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற குடும்பத்தினரின் 2 1/2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சுதாகர், சென்னையில் ஐடி துறையில் வேலை செய்து வருகிறார். தீபாவளியை முன்னிட்டு சுதாகர் மற்றும் அவரது மனைவி கீர்த்தனா , 2 1/2 வயது பெண் குழந்தை சுஷ்மிதாவுடன் தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு காரில் சென்றிருக்கிறார். சென்னையிலிருந்து கரூர் சென்ற குடும்பத்தினரின் கார் கரூர் […]

CSB வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Regional Sales Manager – Gold Loan பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என மொத்தம் 17 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. பணிகளில் குறைந்தது 5 ஆண்டு வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் […]

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் OYO ஹோட்டல்களின் அறைகளில் தம்பதிகள் தனியாக இருக்கும் நிகழ்வுகளை படம்பிடிக்கும் நோக்கில் யாரும் கண்டறிய முடியாத கேமராக்கள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். OYO ஹோட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்து தங்கியிருந்த ஒரு கும்பல் யாரும் கண்டறிய முடியாத கேமராக்களை வைத்திருந்து விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், OYO ஹோட்டல்களில் மர்ம கும்பல் […]

காதலை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில் காதலியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் மனந்தரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஷம்ஜித் (25). கன்னூர் மாவட்டம் வாழ்யாயில் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் விஷ்ணுபிரியா (21). இவர் அதே பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் பார்மசிஸ்ட்டாக பணிபுரிந்து வந்தார். விஷ்ணு பிரியாவும், ஷம்ஜித்தும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் […]

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எம்எல்ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளியை கேரள காங்கிரஸ் கமிட்டி மற்றும் டிசிசி உறுப்பினர் பதவிகளில் இருந்து 6 மாதங்களுக்கு காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. கேரள காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட ‌‌அறிக்கையில் எம்எல்ஏ அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றும், அவரை காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவிகளில் இருந்து 6 மாத காலத்திற்கு கட்சி இடைநீக்கம் செய்கிறது. “குற்றச்சாட்டுகள் குறித்து […]

சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 1801ஆம் ஆண்டு மாமன்னர் மருது சகோதரர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். பின்னர் 3 தினங்களுக்கு பிறகு மருது சகோதரர்களின் உடல்கள் அவர்கள் கட்டிய காளையார்கோயில் எதிர்புறம் அடக்கம் செய்யப்பட்டது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணமடைந்த மருது சகோதரர்களின் குருபூஜை விழாவை அரசு விழாவாக […]

கேரள மாநிலத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், கேரள மாநிலத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் இன்று பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு […]

தன்னைக் கூட்டு பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் பொய்யான செய்தியை உருவாக்கியதாக காசியாபாதை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழன் அன்று உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ஐந்து ஆண்களால் தான் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு மிருகத்தனமாக நடத்தப்பட்டதாக டெல்லி பெண்ணின் கூற்று “புனையப்பட்டது” என்று போலீசார் நிராகரித்துள்ளனர். மேலும் பெண்ணின் கூட்டாளிகளான ஆசாத், அப்சல், கௌரவ் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு […]

தீபாவளிக்கு நாகர்கோவில் – பெங்களூரு, கொச்சுவேலி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் – பெங்களூரு மற்றும் கொச்சுவேலி – தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. நாகர்கோவில் – பெங்களூரு சிறப்பு ரயில் அக்டோபர் 25ஆம் தேதி அன்று நாகர்கோவிலில் இருந்து இரவு 07.35 மணிக்கு புறப்பட்டு காலை 09.20 மணிக்கு பெங்களூரு […]