திருமணத்திற்கு வரன் தேடுவது மிகவும் சிரமமான காரியம் என்றால் அதில் ஒரு விளம்பரத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் தொடர்புகொள்ள வேண்டாம் என இருந்தது , என்னடா இது சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு வந்த சோதனை என்பது போல இருந்தது. பொதுவாக வரன் தேடுபவர்கள் என்ன நிறத்தில் இருக்க வேண்டும், பெண்ணுக்கு சமமானவரா , என்ன உயரத்தில் மாப்பிள்ளை இருக்க வேண்டும், தாய் தந்தை மற்றும் குடும்பத்தின் பின்னணி , எப்படிப்பட்டவர் என்பது போன்ற […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தங்கள் பணியாளர்களின் மனநிலையை கருத்தில்கொண்டு பிரபல இ.காமர்ஸ் நிறுவனம் ஒன்று 11 நாளுக்கு தொடர் விடுமுறை அளித்துள்ளது. பண்டிகைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் பணியாளர்களுக்கு விடுமுறை அளிப்பதில்லை. இந்த மாதிரி நேரத்தில்தான் அதிகப்படியான விற்பனை நடக்கும் என்பதால் இந்த நேரங்களில் கூடுதல் நேரம் பணிச்சுமை இருக்கும். ஆனால் , பிரபல இ.காமர்ஸ் நிறுவனமான மீஷோ .. தங்களின் பணியாளர்களுக்கு 11 நாள் தொடர் விடுமுறை அளித்துள்ளது. துர்காபூஜை , […]
ஜிப்மர் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் , முறையான சிகிச்சை அளிப்பதில்லை என பல்வேறு புகார்கள் குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மீது தொடர்ந்து புகார்கள் எழுவதை அடுத்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் பாராசிட்டாம்மால் மாத்திரை கூட இல்லையாமே , அதற்கும் தட்டுப்பாடு உள்ளதாமே என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த […]
தருமபுரி மாவட்டத்தில் வீடு காலி செய்தபோது இரும்பு பீரோ மின்கம்பியில் உரசியதில் 3 பேர் பலிதாபமாக உயிரிழந்தனர். தருமபுரி அருகே சந்தேப்பேட்டையைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் 2வது மாடியில் குடியிருந்தவர்கள் இலியாஸ் பாஷா மற்றும் குடும்பத்தினர். 9 ஆண்டுகளாக வசித்துவந்த நிலையில் வேறொரு வீட்டிற்கு செல்ல ஏற்பாடுகள் செய்தார். இவரது 2 மகன்களும் வெளியூரில் வேலைபார்த்து வருகின்றனர். வாடகை வீட்டில் இருந்து உடமைகளை எடுத்துக்கொண்டு புதிய […]
’ஜிப்மர் மருத்துவமனையில் மருந்துகள் இல்லை என்று சீட்டு எழுதி கொடுக்கக் கூடாது’ என அறிவுறுத்தி உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் புகழ்பெற்ற மருத்துவமனையான ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடு என செய்திகள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு என புகார்கள் வந்ததை அடுத்து ஆலோசனை நடத்தினோம். […]
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய மருந்துகளை நோயாளிகள் வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக செல்கின்றனர். இந்நிலையில், அனைத்து துறை தலைவர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நமது மருத்துவமனையில் தொடர்ந்து மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, நம்மிடம் கையிருப்பில் […]
சமீப காலமாக நாய்கள் தாக்கும் வீடியோக்கள் பீதியடையச் செய்யும் நிலையில் ’’பிட்புல்’’ நாய் பசுவின் வாயைக்கவ்விய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாவட்டம் கான்பூரில் பசுவை பிட்புல் என்ற வகையைச் சேர்ந்த நாய் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பசுவின் தாடைப் பகுதியை கடித்துக்கொண்டிருக்கின்றது அந்த பிட்புல். வலியால் துடிக்கும் மாடு கத்திக் கொண்டே இங்கும் அங்குமாய் நடக்கின்றது. இதைப்பார்த்த பொதுமக்களுக்கு அருகில் செல்லவே முதலில் […]
புதிய வகை வைரஸ் காய்ச்சலால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அதிகளவில் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் தற்போது இன்புளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, இந்த வகை வைரஸ் காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வைரஸ் காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் […]
லண்டனில் ராணியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது சவப்பெட்டியை நோக்கி ஓடிய இளைஞர் ’’ அவர் உயிருடன் இருக்கின்றாரா’’ என சோதனை செய்தேன் என கோர்ட்டில் பதில் அளித்திருக்கின்றார். லண்டனில் ராணியின் மறைவுக்கு லட்சக்கணக்கான மக்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அஞ்சலி செலுத்தினர். இரவும் பகலும் வெயில் மழை என பாராமல் வந்து சவப்பெட்டி முன்பு நின்று தலை வணங்கி மரியாதை செலுத்தினர். கடந்த வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தும் […]
திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா.. செயற்கையான சீனாவைக் காட்டிலும் சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவில் எனது இறுதிமூச்சு இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்கு திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய்லாமா வந்திருந்தார். அமெரிக்காவின் அமைதி என்ற கல்வி நிறுவனம் (யு.எஸ்.ஐ.பி.) கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் பங்கேற்ற அவர் கூறுகையில், ’’ இந்தியா சுதந்திரமான ஜனநாயக நாடு. அதில் அன்பான மக்கள் சூழ்ந்துள்ளனர். செயற்கைத்தன்மை […]