சென்னை, அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் குடியிருக்கும் இளம் பெண் (23). இவர் காவல்துறையில் காவலராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை தனது வீட்டில் இருக்கும் பாத்ரூமில் குளித்துள்ளார். அப்போது பாத்ரூமின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக ஒருவர் எட்டிப் பார்ப்பது அவருக்கு தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனடியாக ஆடைகளை உடுத்திக் கொண்டு வெளியே வந்து பார்த்தபோது, குளியலறையை எட்டிப் பார்த்தது பக்கத்து வீட்டில் […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழக்தில் அனைத்து பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து வாரந்தோறும் பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது. பள்ளி மாணவர்களுக்கு தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் அக்டோபர் மாதத்தில் இருந்து வாரம் தோறும் புதன் கிழமைகளில் தடுப்பூசி போடப்பட உள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் , ’’ அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவே மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் […]
விருகம்பாக்கத்தில் திரைப்பட கதாநாயகி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் ஜெசிகா. இவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி ‘வாய்தா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் […]
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் அறிவியல் பிரிவு அதிகாரி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் 50 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றான். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் பிரிவு அதிகாரியாக பணியாற்றிய அசோகன் கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் கைகா அணுமின்நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்று 1ம் தேதி கர்நாடகம் சென்றுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். கூடங்குளத்தில் […]
சென்னை, தொடக்கக் கல்விக்கு மாவட்ட அளவில் தனியாக பொறுப்பு அலுவலர்கள் இல்லாததால், பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், அதை தக்கவைக்கவும், பணிகள் தொய்வின்றி நடைபெற தொடக்கப் பள்ளி அளவில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து சிறுபான்மை பள்ளிகளை கண்காணிக்க பள்ளிகூடங்கள் மற்றும் தொகுதி கல்வி அலுவலர்களின் எண்ணிக்கையில், தேவைக்கேற்ப புதிய வட்டாரக் கல்வி அலுவலர் […]
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (செப்.18) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்.19ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது […]
புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் அருகில் இருக்கும் வைத்திக்கோவிலில் வசிப்பவர் வடிவேலு (76). இவர் ஒரு விவசாயி. வடிவேலுவின் மனைவி மாரிக்கண்ணு (55). இவருடைய பெரியப்பா சின்னையா மகன் குணசேகரன் (49). இவருக்கு கல்யாணம் ஆகவில்லை. மேலும், இவர் யாரிடமும் பேசாமல் தனிமையில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மாரிக்கண்ணு தனது வீட்டின் அருகே வசித்து வந்த குணசேகரனுக்கு தம்பி என்ற முறையில், தினமும் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று […]
சேலத்தில் இருந்து சென்னை புறப்படவிருந்த பேருந்தில் ஏறிக்கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி அதி பயங்கரமாக மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கம் பாளையத்தைச் சேரந்த திருநாவுக்கரசு (65) , ரவிக்குமார் (41) , செந்தில் வேலன் (40 ) , சுப்பிரமணி (40) உள்பட 7 பேர் சென்னை சென்றுகொண்டிருந்தனர். இவர்களின் உறவினர் சென்னையில் இருக்கின்றார். அவர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழா […]
சென்னை, தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மோசமானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது;- தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மிகவும் மோசமானது. சென்னையில், தலையில் தொப்பி அணிந்த இஸ்லாமிய சிறுவனைக் கேலி செய்யும் விதமாக நிகழ்ந்த செயலை ஏற்க முடியாது. நல்லிணக்கத்தை குலைக்கும் இத்தகையை செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல், […]
புதுடெல்லி, மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் இரண்டு முறை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த வீடியோ ஒன்றை டெல்லி காவற்துறையினர் வெளியிட்டுள்ளனர். சாலை விழிப்புணர்வு குறித்தும் ஹெல்மெட் அணிவது பற்றியும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “ஹெல்மெட் அணிபவர்களை கடவுள் காப்பாற்றுவார்” என்று பதிவிட்டு டெல்லி காவற்துறையினர் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில், சாலை ஓரத்தில் இருந்து ஒரு கார் சாலையின் மறுபுறம் கடக்க […]