விவசாயிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, ​​வங்கிகளால் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர, கர்நாடக அரசு தற்போதுள்ள விதிகளில் தகுந்த திருத்தங்களை கொண்டு வரும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மாநிலத்தில் உள்ள விவசாயிகள் எளிதாக கடனை அடைக்கும் வகையில் விதிகள் திருத்தப்படும் என்று முதல்வர் கூறினார். 14 லட்சம் விவசாயிகளின் குழந்தைகளுக்காக வித்யாநிதி […]

தான் அதிமுகவில் இணைய போவதாக வெளியான செய்திக்கு திமுக முன்னாள் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு, கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்ததாக கடந்த வாரம் செய்திகள் வந்த நிலையில், திமுகவின் மூத்த தலைவர் ஒருவர், கட்சித் தலைமையகத்திற்கு அவரிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்றார். […]

சுற்றுச்சூழல் ஆர்வலர் பிரேமா சீனிவாசன் அவர்கள் காலமானார் தொழிலதிபர்கள் வேணு சீனிவாசன் மற்றும் கோபால் சீனிவாசன் ஆகியோரின் தாயாரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான பிரேமா சீனிவாசன் அவர்கள் காலமானார். முன்னாள் சுங்கத்துறை அதிகாரியான கே.ரங்கசாமியின் மகளான பிரேமா, டிவிஎஸ் குழும நிறுவனர் டி.வி.சுந்தரம் ஐயங்காரின் இளைய மகன் டி.எஸ்.சீனிவாசனை மணந்தார். Pure Vegetarian CookBook உட்பட பல புத்தகங்களை எழுதியவர் பிரேமா. சுற்றுச்சூழல், தத்துவம் மற்றும் ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஆர்வத்திற்கு பெயர் […]

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பள்ளிக்கல்வித்துறையில் ஜூன் 1ஆம் தேதி , மூன்று ஆண்டுகட்கு மேல் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோருக்கு மாவட்ட அளவில் முதன்மைக்கல்வி அலுவலர் […]

கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என்று விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விஷமிகள் பெட்ரோல் குண்டு வீசி வருவதையடுத்து பெட்ரோலை கேன்களில் விற்பனை செய்யக்கூடது என்று மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் கோவை, பொள்ளாச்சி, மதுரை , ராமநாதபுரம் , உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்புகள் , பாஜவினர். , நிர்வாகிகள் வீடுகள் அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு […]

சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பெயர் சூட்டப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் பேசி வருகின்றார். அதில் இன்று பேசியபோது செப்டம்பர் 28ம் தேதி வீரர் பகத்சிங்கின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு சண்டிகர் விமான நிலையத்தில் பகத்சிங் விமான நிலையம் என பெயர் சூட்டப்படும் என தெரிவித்தார். […]

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவவர் சோனியா காந்தியுடன்  டெல்லியில் சந்தித்தனர்.  வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அல்லாத எதிர்கட்சிக்கான கூட்டணியை ஒன்றிணைக்கும் தீவிர பணியில் பீகார் முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார். பீகாரில், பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்து கொண்ட பின்னர், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் நிதிஷ் […]

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு  வேட்புமனுவை மூத்த தலைவர்களுள் ஒருவரான சசி தரூர் சார்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் 17ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதில் போட்டியிடுபவர்களுக்கு வேட்புமனுக்களை விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 30-ம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் […]

திருப்பதி அருகே புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவரும் அவரது 2 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டாவில் கார்த்திகேயா மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டது.  மருத்துவர் ரவிசங்கர் ரெட்டி என்பவர் இந்த மருத்துவமனையை கட்டியுள்ளார். மூன்று மாடி கட்டடத்தில் மூன்றாவது தளத்தில் மருத்துவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த மருத்துமனையில் இன்று எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து […]

புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 1ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்து வெளியான திரைப்படம் புஷ்பா . உலகம் முழுவதும் வெற்றியைக் கொடுத்தது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்தியில் வெளியான திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடிக்கு மேல் சாதனை செய்துள்ளது. இதனிடையே இரண்டாம் பாகம் வெளியாவது பற்றிய எதிர்பார்பபில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் புஷ்பா இரண்டாம் […]