ஈரானில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் அணிவது கட்டாயப்படுத்தப்படுகிறது. கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்து கடுமையாக தாக்கியதால், படுகாயமடைந்தார். இந்நிலையில் மாஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கடந்த 17-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி […]

கனடாவுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களை கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அரசு எச்சரித்துள்ளது. கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதனால், கனடா செல்லும் இந்தியர்களுக்கு பயண ஆலோசனையை அரசு இன்று வெளியிட்டது. கனடாவில் நடக்கும் வெறுப்புக் குற்றச் செயல்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி அந்நாட்டு அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சகம் பேசியதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கனடா அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளனர். […]

மேற்காசிய நாடான லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். லெபனான் பவுண்ட் மதிப்பு வீழ்ச்சி அடைந்து, பணவீக்கம் உயர்ந்தது. இதையடுத்து 2019-ஆம் வருடம் முதல் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் இருந்து டாலர்களை திரும்பப்பெறுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் முடக்கப்பட்ட சேமிப்புகளை மீண்டும் எடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வாடிக்கையாளர்கள் வங்கிகளை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு […]

திமுக எம்பி கனிமொழியை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியினரிடையே வலுப்பெற்று வருகிறது. திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, அந்த பதவியை திமுக மகளிரணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியில் எழுந்துள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர். […]

உக்ரைன் உடனான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.. உக்ரைனில் கடுமையான போர் நடந்து வரும் நிலையில் அணு ஆயுத தாக்குதல் குறித்து ரஷ்யா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனிடையே, அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.. உக்ரைனில் ரஷ்ய ராணுவம் அணு ஆயுதங்க்ளை பயன்படுத்தினால், அது மிக கடுமையான விளைவுகளை […]

முழு அடைப்பிற்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருவனந்தபுரம், கேரளா உட்பட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய மத அமைப்பு தொடர்புடைய 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, கேரளாவில் அதிகபட்சமாக 22 பேர் […]

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 1 அக். 14 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளை (TET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. மத்திய அரசின் சட்டப்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை intha தேர்வை மாநில அரசுகள் நடத்த வேண்டும். மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி […]

அசாமில் 11 வயது சிறுமியை அவரது மாமா முறை உறவினரே பாலியல் வன்புனர்வு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம், துப்ரி மாவட்டத்தில் 11 வயது சிறுமியை அதுல் பிஸ்வாஸ் (31) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிக்கு பிஸ்வாஸ் மாம முறை. இந்த சம்பவம் தொடர்பாக தாம்ராத் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனது உறவினர் அதுல் பிஸ்வாஸ் […]

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகிறார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கை ஓங்கியது. பொதுக்குழு உறுப்பினர்களில் 95% பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அன்றைய கூட்டத்திலேயே அடுத்த 3 […]

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தினமும் பல விதமான டிஃபன் வகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி திங்கட்கிழமை உப்புமா வகை, செவ்வாய்க்கிழமை கிச்சடி, புதன் கிழமை பொங்கல், வியாழக்கிழமை உப்புமா வகை, வெள்ளிக்கிழமை […]