டி.என்.பாளையம் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டாா். ஈரோடு டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் பகுதியில் வசித்து வருபவர் கருப்பன். இவருடைய மகன் இளங்கோவன் (22). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை இளங்கோவன் காதலித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை பேசி சிறுமியை கடத்தி சென்று இளங்கோவன் திருமணம் […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்தது, நாட்டில் போக்குவரத்து விதிகள் குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது. கார்களில் பின் இருக்கையிலும் சீட் பெல்ட் போடுவதை அரசு இப்போது கட்டாயமாக்கப் போகிறது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150,000 பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர் என்று சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது..நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் விபத்தில் இறக்கிறார் என்று கூறப்படுகிறது.. இரு சக்கர வாகனங்களின் பாதுகாப்பிற்காக […]
திருவனந்தபுரம், காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி கடந்த 2019-ஆம் வருடம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24 முதல் 30-ஆம் தேதி வரை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் […]
தமிழகத்தில் வரும் 27-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழகம், […]
ரயில்களில் தடையை மீறி பட்டாசு எடுத்துச் சென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. ரயில்களில் பட்டாசுகள், டீசல், பெட்ரோல் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான தடை அமலில் உள்ளது. ஆனாலும், தீபாவளி பண்டிகை நெருங்கும்போது வியாபாரிகள் மற்றும் பயணிகள் பட்டாசுகளை மறைத்து எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி, ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை தடுப்பதற்காக ரயில் நிலையங்களில் ஆண்டுதோறும் […]
அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனம், மலிவு விலையில் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.. மற்ற நிறுவனங்கள் 3 மாதங்கள் செல்லுபடியாகும் திட்டங்களின் விலையில், BSNL 1 ஆண்டு செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில் BSNL இன் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம் அதன் நன்மைகளுடன் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கிறது. BSNL இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.. பிஎஸ்என்எல் […]
நாட்டில் உள்ள ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY).. இதன் மூலம், நாட்டின் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச ரேஷன் வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றுநோய்களின் போது அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் உணவு பாதுகாப்பு […]
“பாஜக அலுவலகம் மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசி எங்கள் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதி வி.கே.மேனன் சாலையில் நேற்றிரவு பைக்கில் வந்த இருவர் அப்பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் நோக்கி பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச்சென்றனர். பெட்ரோல் குண்டு வெடிக்காததால், அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழவில்லை. பாஜக […]
நாடு முழுவதும் உள்ள சில இஸ்லாமிய அமைப்புகள் மீது என்ஐஏ நடத்திய சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று எஸ்டிபிஐ அமைப்பு சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அமலாக்கத் துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், சில முக்கிய நிர்வாகிகளையும் கைது செய்தனர். இதனைக் கண்டித்து கேரளாவில் […]
எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க தமிழ்நிலம் என்ற இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வருவாய்த்துறையானது மாநிலத்தின் சீரான சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும், சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால் தாலுகா அலுவலகங்களில் அதற்கான […]