கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா , அவருடைய மகன் , எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது லோக் ஆயுக்தா வக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு வளர்ச்சி ஆணையம் குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா அனுமதி வழங்கினார். இதற்காக எடியூரப்பா மற்றும் அவரது மகன் விஜயேந்திரா ஆகியோர் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கியுள்ளனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஆபிரகாம் என்பவர் புகார் […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழகத்தில் ’ப்ளூ’ காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் விதமாக, சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், ’ப்ளூ’ வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக நாளுக்கு நாள் மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, குழந்தைகளிடையே இந்தக் காய்ச்சல் […]
சண்டிகர் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் 60 பேரின் குளியல் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானதால், சில மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவி ஒருவர், விடுதியில் தங்கி படிக்கும் 60 மாணவிகளின் குளியல் வீடியோக்களை சிம்லாவில் உள்ள அவரது காதலனுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, அந்த வீடியோக்கள் இணையதளங்களில் வெளியானதால், அதிர்ச்சியடைந்த மாணவிகள் இரவு பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் போராட்டத்தில் […]
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டிகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் பார்வையிட்டு, வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்க உள்ளார். சர்வதேச ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இதில், இந்திய வீராங்கனைகள் வெளியேறிய நிலையில், வெளிநாட்டு வீராங்கனைகள் மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாட உள்ளனர். இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் […]
தனது மகனின் சிகிச்சையில் கவனம் செலுத்தி வருவதால், அரசியல் பாதைக்குள் இனி வரமாட்டேன் என நடிகர் நெப்போலியன் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த போதும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும், மத்திய அமைச்சராக இருந்தபோதும் தொடர்ந்து […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,664 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 35 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,555 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisor பணிகளுக்கு என மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 21 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Finance,MCA, MBA போன்ற பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் 3 […]
இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலையிலான மத்திய அமைச்சரவை இந்திய போக்குவரத்து துறையில் சர்வதேச போக்குவரத்து கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்கான இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம், 6,ஜூலை, 2022 அன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம்புதிய அறிவியல் முடிவுகள், புதிய நுண்ணறிவு கொள்கை, விஞ்ஞான தொடர்புகளை அதிகரிப்பதன் மூலம் திறனை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்திறன்களை […]
மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-இன் கீழ் வர்த்தக சான்றிதழ் முறையில் விரிவான சீர்திருத்தங்களை செப்டம்பர் 14, 2022 தேதியிட்ட அறிவிக்கையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள விதிகளில் காணப்படும் சில முரண்பாடுகள் காரணமாக வர்த்தக சான்றிதழ் குறித்து பல்வேறு விதமான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் இன்னல்களையும் சந்திக்க நேர்ந்தது. மேலும், வர்த்தக சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை சாலை போக்குவரத்து […]
மாணவர் சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வேளாண்மை பாடத்தை கூடுதலாக மேல்நிலை பள்ளிகளில் தொழிற்பாடப் பிரிவாக அறிமுகப்படுத்தி 300 வேளாண்மை பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது. இவற்றில் மாணவர் சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) மூலம் தெரிவு செய்து நியமனம் செய்யப்பட்டவர்கள், ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் […]