சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான நடிகர், நடிகைகள் தாமதமாக திருமணம் செய்கின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது எனக்கு திருமணமாகும் பொழுது 40 வயது அவருக்கு 50 வயது என்று கூறிய பிரபல நடிகை தங்களுடைய வாழ்வில் நடந்த ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது 90 காலகட்டத்தில் சின்னத்திரை சீரியல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை நிர்மலா. இவர் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு […]

அதிமுகவில் இருந்த பழனியப்பன் அமமுகவுக்குச் சென்றார். அங்கிருந்து அவரை திமுகவுக்கு இழுத்து வந்தவர் தற்போதைய தமிக அரசியலில் ஆக்டோபஸ் என்று வர்ணிக்கப்படும் செந்தில் பாலாஜி . 2021 ஜுலை 3-ம் தேதி பழனியப்பன் திமுகவிற்கு வந்தபோதே உங்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தருவேன் என வாக்குறுதி கொடுத்தார் செந்தில் பாலாஜி. அதே நேரத்தில் பழனியப்பன் , திமுகவில் இணையும் விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் தருமபுரி […]

உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 8 பேரில் 6 பேர் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர். உத்தராகண்ட் அருகே உத்தரகாசியில் திரவுபதிகா தண்டா மலைச்சிகரத்தில்  நேற்று நடந்த பனிச்சரிவில் 41 மலை ஏற்ற வீரர்கள் சிக்கினர். அவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். இதனிடையே உயிருடன் மீட்கப்பட்ட 8 பேரில் 6 பேர் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். […]

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் , விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை , வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை , தஞ்சாவூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை , அரியலூர் , பெரம்பலூர் , திருச்சிராப்பள்ளி , மற்றும் புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களில் […]

அதிவேகத்தில் வந்த கார் அடுத்தடுத்த நின்றிருந்த 3 கார்கள் மீது மோதி ஆம்புலன்ஸ் மீது மோதி நின்றது இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பை அருகே பந்த்ராவொர்லி கடல் இணைப்புச் சாலையில் ஆம்புலன்ஸ் மற்றும் 3 கார்கள் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதிவேகத்தில் வந்த கார் ஒன்று வேகமாக நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 […]

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இந்திய வம்சாவளி குடும்பத்தச் சேர்ந்த 4 பேர் கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவின் மெர்சி்ட கவுண்டி என்ற பகுதியில் வசித்து வந்தவர்கள் கடத்தப்பட்டனர். 8 மாத குழந்தை உள்பட ஜஸ்லீன் கவுர் , அவரது தந்தை ஜஸ்தீப் சிங் (36) அவரது மாமா அமதீப் சிங் (39 ) ஆகியோர் கடத்தப்பட்டார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரர்கள் பற்றிய விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளன். ஆயுதம் ஏந்திய […]

புனேவில் சாகர் டிஃபென்ஸ் பொறியியல் தனியார் நிறுவனம் ’’வருணா ’’ என்ற மனிதரை ஏற்றிச் செல்லும் நாட்டின் முதல் ஆளில்லா ட்ரோன் விமானத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ட்ரோன் விமானத்தின் சோதனை நிக்ச்சி நடைபெற்றது. இதில் ஆளில்லாத ட்ரோன் மனிதனை தானாக ஏற்றிக்கொண்டு பறக்கும் காட்சி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. சாக்கன் தளமான சாகர் தற்காப்பு பொறியியல் தனியார் நிறுவனம் இந்த வருணாவை விரைவில் இந்திய நேவி படையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. […]

தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தங்கள் பிரிவை அறிவித்து 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது விவாகரத்தை ரத்து செய்வது பற்றி யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் சமூக வலைத்தலங்களில் வெளியிட்ட பதிவில் நாங்கள் இருவரும் மனம் ஒத்து பிரிய முடிவு எடுத்துள்ளோம் கடந்த 18 ஆண்டுகள் நண்பர்களாக , தம்பதிகளாக , பெற்றோர்களாக , நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் […]

தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ரூ.4,835 ஆகவும் வெள்ளிவிலை 30 காசுகள் அதிகரித்து 67 ரூபாயாகவும் விற்பனையாகின்றது. தங்கம் விலை கிராம் 60 ரூபாய் இன்று அதிகரித்துள்ளது. கிராம் விலை ரூ.4835 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. சவரன் விலை ரூ.480 அதிகரித்து ரூ.38680 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 2 நாட்களில் ரூ.1040 அதிகரித்துள்ளது. வெள்ளி விலை 30 காசுகள் இன்று ஏற்றத்துடன் கிராம் ரூ.67 க்கு […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,468 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 17 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,060 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]