சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 01 ஆக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஜோதி மல்ஹோத்ராவுடன் தொடர்பில் இருந்ததாகவும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற உளவு வலையமைப்பில் ஈடுபட்டதாகக் கூறி, 1.1 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் “ஜான் மஹால்” சேனலை நடத்தி வரும் மற்றொரு யூடியூபர் ஜஸ்பீர் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர் . பஹல்காம் தாக்குதல் சம்பவத்தையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. அமெரிக்காவின் தலையீட்டு […]
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பகுதியளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை நள்ளிரவு 12:01 மணி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் […]
பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐபிஎல் தொடரில் கடந்த 17 ஆண்டுகளாக கோப்பைக்காக ஏங்கிய பெங்களூரு அணிக்கு இந்தாண்டு தான் கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த இறுதி யுத்தத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி கோப்பையை வென்றது இதுவே முதல்முறை. இதை கொண்டாடும் […]
அகதிகள் கோரிக்கைகளை விரைவுபடுத்தவும், ஃபெண்டானில் கடத்தலைத் தடுக்கவும் கனடா ‘வலுவான எல்லைச் சட்டம்’ அறிமுகப்படுத்தியுள்ளது. கனட அரசு, ‘வலுவான எல்லைச் சட்டம்’ என்ற புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அகதிகள் கோரிக்கைகளை கட்டுப்படுத்துதல், குடியேற்ற செயல்முறையை மேம்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் கடத்தலை, குறிப்பாக ஃபெண்டானைலைத் தடுப்பதே இதன் நோக்கமாகும். இந்த சட்டம் தற்காலிக குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு குறிப்பாகப் பொருந்தும், இதனால் இந்த அமைப்பு தவறாகப் பயன்படுத்தப்படாது. 2023 […]
தக் லைஃப் திரைப்படம் வெளிநாடுகள் மற்றும் மற்ற மாநிலங்களில் அதிகாலையிலேயே வெளியாகியுள்ள நிலையில், சோஷியல் மீடியா முழுக்க அதன் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் நாயகன் படத்துக்குப் பிறகு உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏற்கனவே வெளியாகியுள்ள “சுகர் […]
ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார். மூத்த குடிமக்களை மையமாக வைத்த பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாக மாதிரிக்கு இணங்க, ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை கால வரம்பிற்குள் நிறைவேற்ற மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிபொறுப்பு), பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற 13-வது […]
பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். தற்போது கூட்ட நெரிசல் தொடர்பாக ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டம் துக்கமாக மாறியது. பெங்களூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்ற அணியான ஆர்சிபியின் லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்டாட வந்திருந்தனர். அறிக்கையின்படி, எம் சின்னசாமி மைதானத்தின் கொள்ளளவு […]
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வருகின்ற 30.06.2025 வரை சேலம் கிளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதி கழகம் ஆகும். 1949-ஆம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் […]
லிப்ஸ்டிக் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்களை சாப்பிட்டு வைரலாகிய இன்ஸ்டா பிரபலம் உடல்நிலை பாதிக்கப்பட்ட உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த 24 வயதான இளம்பெண் இன்ஸ்டாவில் பிரபலமாக உள்ளார், அதாவது, அழகு சாதனப் பொருட்களை உணவாகப் சாப்பிட்டு அதை வீடியோக்களாக எடுத்து அப்லோடு செய்து வைரலாகினார். அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் லிப்ஸ்டிக், ப்ளஷ் மற்றும் பிற ஒப்பனைப் பொருட்களை சாப்பிடும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து […]

