fbpx

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இருக்கும் ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி, தனது தாய், அண்ணனோடு வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு சிறுமியின் தாய் 31 வயதான டிரைவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர் சிறுமிக்கு வளர்ப்பு தந்தை முறையாக …

உங்கள் குழந்தைகள் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகவில்லை என்றால் அவர்களை திட்டுவது, கடிந்து கொள்வது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும் என பெற்றோர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சந்தையை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். …

நாடாளுமன்றத் தேர்தலில் 450 உறுப்பினர்களை பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராகுல் காந்தி பாத யாத்திரை செல்வதன் நோக்கம் இந்தியாவை ஒற்றுமையாக இணைப்பதற்காக என்று கூறுகிறார். மோடியின் ஆட்சியில் இந்தியா முழுமையாக இணைந்துள்ளது என்பதனையும், நாடு பெற்றுள்ள வளர்ச்சியினையும் யாத்திரை …

கடலூர் மாவட்டத்தில் வசித்து வரும் சண்முகம் (50), இவரது மனைவி சசிகலா(48). இவர்களுக்கு இரண்டு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மூவரும் சேலத்தில் இருக்கும் அவர்களது பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சண்முகத்திற்கும் சசிகலாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் சசிகலாவை வீட்டிற்கு வெளியே வைத்து பூட்டி விட்டு சண்முகம் தூங்கியுள்ளார். வீட்டிற்கு வெளியே …

அரசியல் கட்சிகளுக்கு போலி நன்கொடைகள் கொடுத்த விவகாரத்தில் இன்று நாட்டின் பல மாநிலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் உரிய விதிகளைப் பின்பற்றாமல் நன்கொடையை பெற்றுக் கொண்டு வருமான வரி மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கும் …

மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் வசித்து வருபவர் சாகர் ஜாதவ் (19). இவர் நேற்று வீட்டின் அருகே போடப்பட்டு இருந்த கணபதி மண்டலுக்கு சென்றிருந்தார். பிறகு தனது காதலிக்கு வீடியோ காலில் பேசி தரிசனத்திற்கு வரும்படி தெரிவித்தார். இதற்கு அவரது காதலி மறுத்துள்ளார். இதனால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணபதி மண்டலுக்கு வரவில்லை என்றால் தீக்குளிக்க போவதாக …

”தரணி போற்றும் அளவிற்கு தமிழ்நாட்டை நடத்திச் செல்கிறீர்கள்” என முதலமைச்சர் முக.ஸ்டாலினுடன் விமானத்தில் பயணித்த சக பயணி ஒருவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடிக்கு செல்வதற்காக முதலமைச்சர் முக.ஸ்டாலின் விமானத்தில் அமர்ந்திருந்தார். அவர் கன்னியாகுமரியில் தொடங்கும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றிருக்கிறார். அப்போது, அதே விமானத்தில் …

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் இருக்கும் சிலவாட்டம் கிராமத்தில் வயல்வெளி பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் ஆண் மற்றும் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தவர்கள் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பன்னி குண்டு கிராமத்தைச் சேர்ந்த …

தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழில் கொடுப்பது கஷ்டம் என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் நாளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் மற்றும்
கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று …

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனம் ஒன்று அரசு பேருந்து மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

பேருந்து மீது இருசக்சர வாகனம் மோதியதால் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரண்டு …