fbpx

வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.42-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்திற்கு கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து இருந்து வரும் நிலையில், அங்கு பருவமழை வெளுத்து வாங்குவதால் அதன் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் தக்காளிவரத்து வெகுவாக குறைந்துள்ளதால், அதன் விலை ஏறுமுகத்தில் …

சென்னை வியாசர்பாடி கரிமேடு பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவி இளவரசி. இவருக்கு சுசில் (21 ) என்ற மகனும் உள்ளார். சுசில் பி காம் வரை படித்துவிட்டு கொடுங்கையூர் சேலை வாயில் பகுதியில் நடனப் பள்ளியில் டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார். சுசில் தினமும் நடன வகுப்பு முடித்து இரவு நேரங்களில் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். …

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் 1,545 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இதற்காக …

சென்னை, அதிமுக ‌இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல காதணி விழாவில் கலந்துகொண்டார். அங்கு அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-

அதிமுக பாசமுள்ள கட்சி. அன்போடு அழைத்ததால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஒரு தொண்டராக கலந்து கொண்டேன். மேலும் தி.மு.க. எம்எல்ஏக்கள் பத்து பேர் என்னுடன் பேசி வருகின்றனர். திமுக ஒரு …

கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்திற்கு ‘மஞ்சள் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. …

டெல்லியில் வரும் ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை, உற்பத்தி மற்றும் வெடிக்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிகபட்சமாக டெல்லி மாநிலம் காற்று மாசுவால் திணறி வருகிறது. அங்கு கடந்த சில ஆண்டுகளாகவே காற்றின் தரம் மிக மிக …

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி நாளை அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார்.

பொதுக்குழு தீர்ப்புக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நாளை எடப்பாடி பழனிசாமி செல்ல உள்ளதாக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் …

காரின் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றும் அணியாதவர்களுக்கு விரைவில் ரூ.1000 அபராதம் வசூலிக்கும் திட்டம் அமலுக்கு வரும் என்றும் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறுக்கிழமை அன்று மும்பையில் நிகழ்ந்த கார் விபத்தில் டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். முன் இருக்கையில், …

தலைவாசல் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில் கல்லூரி மாணவன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சதாசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சீனிவாசன். இவரது மகன் சூர்யபிரகாஷ். இவர், தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த …

“வெறுப்பரசியலுக்கு என் தந்தையை இழந்ததுபோல் என் தேசத்தை இழக்கமாட்டேன்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை இன்று தொடங்கவிருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வெறுப்பரசியலுக்கு தனது தந்தையை இழந்ததுபோல் இந்த தேசத்தை இழக்க …