ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

சாப்பிடுவதற்கு எளிதானது. மேலும் மேலும் சாப்பிடத் தூண்டும் சுவை… இதுதான் பீட்சாவின் ரகசியம். பீட்சா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும். சீஸ், சாஸ் மற்றும் டாப்பிங்ஸுடன் கூடிய இந்த சுவையான உணவு பலரைக் கவர்கிறது. இருப்பினும், பீட்சாவை அடிக்கடி சாப்பிடுவது நமது உடலுக்கு நல்லதல்ல. இதில் அதிக கலோரிகள், நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சோடியம் உள்ளன, இது இதயம், செரிமான அமைப்பு மற்றும் சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளை […]

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் கொடிய தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று அறிவித்தார். டொனால்ட் ட்ரம்ப், நைஜீரியாவில் கிறிஸ்தவ சமூகத்துக்கு “உயிர்வாழ்தலுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது” என கடந்த அக்டோபர் இறுதி முதல் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். நைஜீரியாவில் கிறிஸ்தவர்களை குறிவைத்து நடைபெறும் வன்முறைகளை அந்த நாட்டின் அரசு தடுக்க தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இதனால், மேற்கு […]

நீண்ட கால அடிப்படையில் பாதுகாப்பான வருமானத்தை பெற விரும்புவோருக்கு, சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் அரசு சார்ந்த முதலீட்டுத் திட்டங்களே இன்றும் நம்பிக்கைக்குரிய புகலிடமாக விளங்குகின்றன. பங்குச் சந்தை முதலீடுகளில் லாபம் அதிகமாக இருந்தாலும், அதில் ஒளிந்துள்ள அபாயங்களை கருத்தில் கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர், பெரும்பாலும் வங்கி மற்றும் தபால் நிலையங்களின் நிலையான வைப்புத் திட்டங்களையே (FD) தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பாக, வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படுவதால், […]

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் புதிய கட்சி நோக்கி நகர்வதும் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இழந்த ஆட்சியை மீட்டெடுக்க பாஜகவுடனான கூட்டணி மற்றும் புதிய தேர்தல் வியூகங்களுடன் இபிஎஸ் தரப்பு தயாராகி வரும் நிலையில், கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசல்களும் […]

இந்திய ரயில்வேயின் நாடு தழுவிய கட்டண உயர்வைத் தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட ரயில் கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.. இதன் மூலம் இன்று முதல் ரயில் பயணம் விலை உயர்ந்ததாக மாற உள்ளது. இது 6 மாதங்களுக்கும் குறைவான காலத்தில் செய்யப்படும் இரண்டாவது கட்டண உயர்வு ஆகும். கடைசியாக இந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டண உயர்வு செய்யப்பட்டது. அது ரயில்வே அமைச்சகத்திற்கு ரூ.700 கோடி வருவாயை ஈட்டித் […]

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சாலைப் பகுதியில் அமைந்துள்ள சத்யா நகர் உப்பளம் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக தென்பாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார், அங்கு ஒரு இளைஞர் பீர் பாட்டிலால் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். திருச்செந்தூர் டவுண் டி.எஸ்.பி மதன் நேரில் […]

இந்த ஆண்டு டிசம்பர் 15 வரை தேசிய தலைநகரான டெல்லியில் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட 23,340 பேரில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர். இந்த தகவலை டெல்லி காவல்துறை வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. காணாமல் போன மொத்த நபர்களில், 14,166 பேர் பெண்கள், இது சுமார் 61 சதவீதமாகும், அதே நேரத்தில் 9,174 பேர் ஆண்கள் அல்லது சுமார் 39 சதவீதம் பேர் என்று அந்தத் தரவுகள் […]