தமிழ்நாட்டில் நிலவும் பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த கருத்துக்கள், சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பிய நிலையில், அதற்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ‘ஹாஃப்-பாயில்’ சாப்பிட வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியது முட்டையை குறிப்பிடுவதாகப் பரவலாக புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அமைச்சர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பறவைகள் அல்லது […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் சமீப காலமாக பலர் எதிர்கொள்ளும் முக்கிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்று கொழுப்பு கல்லீரல் ஆகும். லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மாறும். நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 30-40 சதவீதம் பேர் மது அருந்தாத கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், இந்த நோய் இவ்வளவு அதிகரிப்பதற்கான […]
அமெரிக்காவை அதிரவைத்த ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்திற்கு இணையான ஒரு கொடூரமான குற்றச்சம்பவம், கடந்த 2006-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள நிதாரி கிராமத்தில் அரங்கேறியது. இந்தியாவையே நிலைகுலைய வைத்த இந்த வழக்கில், தொழிலதிபர் மொகிந்தர் சிங் பந்தேர் மற்றும் அவரது வீட்டு வேலைக்காரன் சுரேந்தர் கோலி ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி, அவர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் […]
திமுகவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 87 வயதை கடந்த நிலையில், வயது மூப்பு சார்ந்த உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்து வரும் அவர், நேற்று (பிப்ரவரி 10) எதிர்பாராத விதமாக தனது இல்லத்தில் தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் விழுந்ததில் ஏற்பட்ட காயங்களுக்கு […]
கரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன், 41 உயிர்கள் பறிபோவதற்குக் காரணமானவர்களை முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்க்காமல் கரூர் காவல்துறை மெத்தனமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். “நிஜமான துணிச்சல் இருந்திருந்தால், அந்தத் துயரச் சம்பவத்தின்போது விஜய் கரூரை விட்டு ஓடியிருக்கக் கூடாது” என்று கூறிய அவர், […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த பேயன்பட்டி ஜீவா நகரைச் சேர்ந்த நந்தகுமார் (26) என்ற வாலிபர், கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி கழுத்தில் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கூலித் தொழிலாளியான இவர், ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஜெயராமன் கொலை வழக்கில் நந்தகுமார் தொடர்புடையவர் என்பதாலும், அவர் சமீபத்தில்தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்தார் என்பதாலும், பழைய பகையால் […]
தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்நிலையில், தனது நீண்டகால அரசியல் சகாவான செங்கோட்டையனின் இந்த முடிவை, அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மிகுந்த மனவேதனையுடனும், அதேசமயம் கடும் விமர்சனங்களுடனும் சாடியுள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் இது குறித்துப் பேசுகையில், “அதிமுகவில் அமைச்சராகவும், கட்சியின் அசைக்க முடியாத தூணாகவும், எப்போதும் முதலிடத்தில் இருந்தவர் […]
தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களின் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் பி.எஃப் (EPFO) திட்டத்தில், மத்திய அரசு ஒரு புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதுவரை பி.எஃப் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து, பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நடைமுறை இருந்தது. ஆனால், இனி உங்கள் மொபைலில் உள்ள UPI செயலி மூலமே நொடிப் பொழுதில் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக […]
கலியுக வரதனான முருகப்பெருமான் அழகு, அறிவு, வீரம் என அனைத்து நற்பண்புகளுக்கும் இலக்கணமாக திகழ்பவர். அறுபடை வீடுகளில் வீற்றிருக்கும் அந்தத் தண்டாயுதபாணியை தரிசிப்பவர்களுக்குச் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து கிரக கோளாறுகளும் நீங்கும் என்பது ஐதீகம். குறிப்பாக, தைப்பூச திருநாளில் முருகனுக்கு விரதமிருந்து காவடி எடுப்பது பக்தர்களுக்குப் பெரும் பேறு. ஆனால், தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டும் பழனி முருகனை தெய்வமாப் பார்க்காமல், தங்கள் வீட்டு மருமகனாக […]
நம் முன்னோர்கள் வழிவழியாக போற்றிப் பாதுகாத்து வரும் குலதெய்வம் என்பது வெறும் வழிபாடு மட்டுமல்ல, அது நம் ரத்தத்தோடு கலந்த ஒரு பாதுகாப்பு அரண். குலதெய்வத்தின் அருள் இன்றி நாம் எடுக்கும் எந்தவொரு முயற்சியும் முழுமை பெறுவதில்லை என்பது காலம் காலமாக நிலவி வரும் அசைக்க முடியாத நம்பிக்கை. குறிப்பாக, ஒரு இல்லறம் இனிதாக அமைய ஆணும் பெண்ணும் இணைவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் இரு வீட்டாரின் குலதெய்வ […]

