திருமணமான ஒரு பெண்ணுடன், அவருடைய சம்மதத்தின் பேரில் பாலியல் உறவு கொண்ட பிறகு, அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தால், அது பலாத்காரம் ஆகாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முந்தைய உறவை ஒரு காரணமாக காட்டி, சம்பந்தப்பட்ட நபரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தவோ அல்லது அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறவோ முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. […]

குழந்தைகளின் எதிர்கால கல்வி, திருமணம் போன்ற நீண்ட கால செலவுகளுக்காக பாதுகாப்பான மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய முதலீட்டு திட்டத்தை தேடும் பெற்றோர்களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund – PPF) திட்டம் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. இது இந்திய அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற திட்டம் என்பதால், முதலீட்டின் பாதுகாப்புக்கு 100% உத்தரவாதம் உண்டு. மேலும், பங்குச் சந்தை அபாயங்கள் இதில் இல்லாததால், சந்தையில் […]

இன்று காலை வங்கதேசத்தில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கத்தால் மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்க அதிர்வு காலை 10.08 மணி முதல் 10.10 மணி வரை சில விநாடிகள் உணரப்பட்டது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கொல்கத்தா, மல்டா, நாதியா, கூச் பெஹார் மற்றும் பல மாவட்டங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தக்ஷிண் மற்றும் உத்தர் தினாஜ்பூர் பகுதிகளிலும் அதிர்வு […]

காலையில் எழுந்ததும் பலருக்கு முதலில் நினைவுக்கு வருவது ஒரு கப் சூடான காபி. இது உடலை உற்சாகப்படுத்தி, நாளைத் தொடங்க உதவுகிறது. இருப்பினும், வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் இதயப் பிரச்சினைகள் ஏற்படுமா? அது ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்துமா? இது தொடர்பாக, அமெரிக்காவில் 25 வருட அனுபவமுள்ள இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜெர்மி ஒரு சுவாரஸ்யமான விளக்கத்தை அளித்துள்ளார். மருத்துவரின் கூற்றுப்படி, காபி இதயத் துடிப்பை […]

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள லிஃப்டில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.. இதனால் அந்த மாலின் 3 மாடிகளிலும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.. தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சிதறி ஓடினர்.. மாலில் 10 மணிக்கு பிறகு தான் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.. எனினும் 8 மணிக்கே […]

சிறிய வயது முதலே பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இத்தகைய பைக்குகளில் ஒரு பொதுவான விஷயம் இருக்கும். அது என்னவென்றால், பைக்குகளை ஓட்டுபவரின் இருக்கையை விட, பின் இருக்கை சற்று உயரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இது சில சமயங்களில் பின்னால் அமர்பவர்களுக்கு சௌகரிய குறைபாட்டை அளித்தாலும், இந்த சிறிய வடிவமைப்புக்குப் பின்னால் மிக சிறந்த பொறியியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஒளிந்திருக்கின்றன. தினசரிப் பயன்பாட்டிற்கான இருசக்கர வாகனங்கள் […]