பணி ஓய்வுக்குப் பின் பெரும்பாலானோருக்குப் பொருளாதார ரீதியாக ஒரு பயம் ஏற்படுவது இயல்பு. மாத வருமானம் நின்ற பிறகு, சேமிப்பு அல்லது குழந்தைகளை நம்பியே வாழ வேண்டிய கட்டாயம் உருவாகலாம். ஆனால், நீங்கள் வசிக்கும் சொந்த வீட்டின் மூலமாகவே நிலையான மாத வருமானம் பெற முடியும் என்றால் நம்புவீர்களா..? ஆம், இந்த நோக்கத்திற்காகவே மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட திட்டம்தான் ரிவர்ஸ் மார்ட்கேஜ் திட்டம் (Reverse Mortgage Scheme). இந்தத் திட்டத்தின் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மதுபான விற்பனை விவரம், டாஸ்மாக் கணக்கில் செலுத்திய தொகை இடையே மாறுபாடு இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து, டாஸ்மாக் மேலாண் இயக்குநர், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: மதுபானக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை ரொக்கம், கார்டு மற்றும் யுபிஐ ஆகியவை மூலம் நடைபெறும் நிகழ்வுகளில், மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் மட்டுமே அவைகளை விற்பனை செய்து இருக்க வேண்டும். இந்த நடைமுறையில் […]
தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பசுமைக் குன்றுகளின் மத்தியில் வீற்றிருக்கிறார் குறிஞ்சி நிலக் குமரனான முருகப்பெருமான். மூலிகை மணமும், தெய்வீக அதிர்வுகளும் நிறைந்திருக்கும் இத்தலமே வரலாற்றுச் சிறப்புமிக்க தோரணமலை முருகன் கோவில் ஆகும். அகத்தியர் மற்றும் தேரையர் போன்ற புகழ்பெற்ற சித்தர்கள் தங்கள் அரிய மருத்துவ ஆராய்ச்சிக்காக இந்த மலையை தேர்ந்தெடுத்ததாக பாரம்பரிய நம்பிக்கை கூறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மூலிகைகள், தியான […]
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழுக்கான பிரச்சாரத்தை மத்திய ஓய்வூதிய அமைச்சகம் இம்மாதம் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடத்துகிறது. நாடு முழுவதும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழுக்கான பிரச்சாரத்தை மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் இம்மாதம் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடத்துகிறது. ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் வழங்கும் வகையிலும், ஓய்வூதியம் தொடர்பான அனைத்து அம்சங்களையம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பதற்கும் […]
2026-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும். பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும். மே.8-ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும். மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 27-ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வுகள் நடைபெறும். 11-ம் வகுப்பில் தவறிய […]
உடல் பருமன் இதய நோய் மற்றும் அதிக கொழுப்பின் அபாயத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது, ஆனால் உடல் பருமனுக்கு காரணமான MC4R எனப்படும் ஒரு மரபணு இதய நோயிலிருந்து பாதுகாக்கக்கூடும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. MC4R மரபணுவின் அரிய மாறுபாட்டைக் கொண்டவர்களுக்கு LDL (கெட்ட கொழுப்பு) குறைவாகவும், இதய நோய் அபாயம் குறைவாகவும் இருப்பதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த மரபணு பருமனானவர்களில் தோராயமாக ஒரு சதவீதத்தினரிடமும், பருமனான […]
கார்த்திகை பூர்ணிமா இந்து மதத்தில் மிகவும் புனிதமான நாளாகும், இதில் ஸ்நானம், தானம், வழிபாடு, விரதம் மற்றும் விளக்கு ஏற்றுதல் ஆகியவை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த நாளில் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். கார்த்திகை மாதம் இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பல முக்கியமான விரதங்களும் பண்டிகைகளும் வருகின்றன, மேலும் விஷ்ணு தனது நான்கு மாத யோக நித்திரையிலிருந்து விழித்தெழுந்து, மங்களகரமான […]
திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளுக்கு 14-ம் தேதி வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும், திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் நேரடி சேர்க்கை நவம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சேர விரும்பும் மாணவர்கள் அனைத்து சான்றிதழ்களுடன் […]
நள்ளிரவில் பிரச்சாரம் மேற்கொண்டதால் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதிய தமிழகம் கட்சி சார்பில் 2026 ஜனவரி 7ம் தேதி மதுரையில் 7வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தற்போது விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிருஷ்ணசாமி மாநாட்டு பிரச்சாரம் […]
இந்தியாவில் தொற்று ஏற்படும் அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) அறிக்கை அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு ஒன்பது பேரில் ஒருவர் ஏதேனும் ஒரு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ICMR தனது வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வக வலையமைப்பின் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவலை வழங்கியுள்ளது. ICMR அறிக்கையின்படி, ஜனவரி மற்றும் மார்ச் 2025 க்கு இடையில் […]

