ராஜராஜ சோழனின் 1,040வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர்.1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1040-வது சதய விழா வரும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ சந்திப்பு. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ளது. எனவே தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். திமுகவும் தனது கூட்டணியை கடந்த 8 வருடமாக உடையாமல் பார்த்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, […]
பலுசிஸ்தான் மாகாணத்தின் கச்சி மாவட்டத்தின் பாக் நகரில் நேற்றிரவு நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதலில், பல பயங்கரவாதிகள் காவல்துறை மற்றும் துணை ராணுவ நிலைகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார், பலர் காயமடைந்தனர், மேலும் பல அரசு கட்டிடங்கள் தீக்கிரையாகின. மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) மன்சூர் ரெஹ்மான் இதுகுறித்து பேசிய போது “ சுமார் 50 கனரக ஆயுதம் […]
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. தவெக முக்கிய நிர்வாகிகள் தலைமறைவான நிலையில், விஜய்யும் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.. சம்பவம் நடந்து […]
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இந்தியா கூட்டணி இன்று வெளியிட்டது.. மேலும் மாநிலத்தை குற்றமற்ற மாநிலமாக மாற்றுவதாக உறுதியளித்தது. ஜன் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனாவின் கீழ் ஒவ்வொரு தனிநபருக்கும் ரூ.25 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆட்சி அமைத்த 20 நாட்களுக்குள், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு […]
ஒரு வங்கிக் கணக்கில் உள்ள அனைத்துப் பணத்தையும் யாரும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில்லை. பலரும் தங்கள் தேவைக்கேற்ப அந்தப் பணத்தை பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், வங்கியில் பயன்படுத்தப்படாத பணத்திற்கு வங்கி மிகக் குறைந்த வட்டியை வழங்குகிறது. ஒவ்வொரு வங்கியும் சேமிப்புக் கணக்குகளுக்கு மிகக் குறைந்த வட்டியை வழங்குகிறது. இருப்பினும், வங்கிக் கணக்கில் பயன்படுத்தப்படாத பணத்திற்கு அதிக வட்டியைப் பெறலாம். நிலையான வைப்புத்தொகையைப் போலவே இந்த வட்டியையும் நீங்கள் பெறலாம். இதற்காக நீங்கள் […]
சென்னை மதுரவாயல் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் திரிபுராவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரின் பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக, ரேபிடோ (Rapido) ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், கைது செய்யப்பட்ட ஓட்டுநர் அளித்த வாக்குமூலம், இச்சம்பவத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம், அந்த இளம்பெண் தனது பயணத்திற்காக ரேபிடோ சேவையை நாடியுள்ளார். அவர் முதலில் பள்ளிக்கரணைக்குச் […]
குறைந்த வரிகள் அல்லது வரிகள் இல்லாத நாடுகள் வரி சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.. இந்த நாடுகள், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு சாதகமான விதிகளைக் கொண்டுள்ளன. இவை பெரும்பாலும் சிறிய தீவு நாடுகள். அவற்றின் வருமானம் சர்வதேச நிறுவனங்களின் வருடாந்திர கொடுப்பனவுகளிலிருந்து வருகிறது. சில நாடுகளில், வருமான வரி செலுத்தாமல் நீங்கள் விரும்பும் அளவுக்கு சம்பாதிக்கலாம். அதாவது, நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், வரிகள் இல்லை. அவை எந்தெந்த நாடுகள் என்று […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவர், கடந்த 16-ஆம் தேதி அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, ஒரு இளம்பெண்ணின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, 6.5 சவரன் நகையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செந்துறை பகுதியில் முதியவருடன் பேச்சு கொடுத்த அந்த இளம்பெண், தன்னைத் திட்டக்குடியைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், தன்னைத் திட்டக்குடி எல்லையில் கொண்டுபோய் விடுமாறு கோரியுள்ளார். […]
டெல்லி மாநிலம் திமர்பூரில் உள்ள காந்தி விஹார் பகுதியில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் படித்து வந்த 32 வயது இளைஞர் ஒருவர், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தீயில் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர் ராம் கேஷ் மீனா என்று அடையாளம் காணப்பட்டது. முதலில் இதைத் தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பாகவே காவல்துறையினர் சந்தேகித்தனர். ஆனால், ராம்கேஷ் மீனாவின் பெற்றோர் […]

