மியான்மரில் தொடரும் ஒடுக்குமுறையில் இருந்து தப்பி, பாதுகாப்பான புகலிடம் தேடி வரும் ரோஹிங்கியா அகதிகள், கடலில் எதிர்கொள்ளும் துயரங்கள் நிற்கவில்லை. சமீபத்தில், தாய்லாந்துக்கும் மலேசியாவுக்கும் இடையேயான கடல் எல்லைக்கு அருகில், ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த கோர விபத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், படகில் இருந்த மேலும் நூற்றுக்கணக்கானோர் கடலில் மாயமாகி இருக்கலாம் என்று மலேசிய கடலோரக் காவல் அமைப்பு […]

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில், இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சரண் மாவட்டத்தின் மனாஸ் கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9.45 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் […]

2002ஆம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அபினய். தமிழில் முன்னணி நடிகராக அவர் மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. தனது முதல் படத்தை தொடர்ந்து ஜங்க்ஷன், சிங்கார சென்னை, பொன் மேகலை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் சில காரணங்களால் திரைத்துறையில் இருந்து விலகி, சில விளம்பரங்கள் மற்றும் பின்னணி குரல் (dubbing) துறைகளில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அபினய் சரியாக பட வாய்ப்புகள் […]

அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரி விசாரணையில் முக்கியமான முன்னேற்றமாக, ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் ஹரியானாவின் பாரிதாபாத் பகுதியில் இருந்து 2 ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் சுமார் 350 கிலோ வெடிகுண்டு பொருட்களை மீட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மீட்பு, வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என கூறப்படுகிறது. இதற்கு முன்பு, அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய டாக்டர் ஆதில் அகமது […]

நாள்பட்ட சிறுநீரக நோய் உலகளவில் பெரும் சுகாதார சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த நோயாளிகள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக 2ஆம் இடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ‘தி லான்செட்’ இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, மருத்துவத் துறைக்கே சவாலாக உள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் உலகளாவிய நோய் சுமை பதிவு செய்த தரவுகளின் அடிப்படையில் இந்த […]

வடகிழக்கு பருவமழையின் முதல் இரண்டு சுற்று மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் மழையின் அளவு குறைந்து காணப்பட்டது. இருப்பினும், இன்று (திங்கட்கிழமை) இரவு முதல் தமிழகத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைய உள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் சீனக் கடலில் இருந்து வரும் கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வரும் வடக்குக் காற்றும் ஒருங்கிணைந்து, நாளை (நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை) […]

யூரிக் அமிலம் என்பது நம் உடலில் இயற்கையாகவே உற்பத்தியாகும் ஒரு பொருள். இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளில் காணப்படும் பியூரின் என்ற பொருளை உடல் ஜீரணிக்கும்போது இது உருவாகிறது. பொதுவாக, யூரிக் அமிலம் ரத்தத்தில் கரைந்து சிறுநீரகங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் சில நேரங்களில், அது அதிகமாக உற்பத்தி செய்யப்படும்போது அல்லது சரியாக வெளியேற்றப்படாவிட்டால், இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது. இந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று […]