கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற UPI செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. அக்டோபர் 8-ஆம் தேதியான இன்று முதல் இந்த மாற்றம் அனைத்து செயலிகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதியின்படி, இனி பணப் பரிமாற்றம் செய்யும்போது தற்போதுள்ள பின் நம்பர் மட்டுமின்றி, கைரேகை (Fingerprint) மற்றும் […]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மற்றும் குஜராத் மாநிலகளுக்கு மத்திய அரசின் கூடுதல் உதவியாக 707.97 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.மேலும் இந்த உயர்நிலைக்குழு ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் […]

உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் இந்த காலக்கட்டத்தில், பலர் தங்கள் சர்க்கரை உட்கொள்ளலைக் கண்காணிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர், குறிப்பாக உணவில் சேர்க்கப்படும் சர்க்கரைகள் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சர்க்கரை நுகர்வை நிர்வகிப்பதில் மிக முக்கியமான தடைகளில் ஒன்று, அன்றாட உணவுகளில் காணப்படும் மறைக்கப்பட்ட சர்க்கரைகளை அடையாளம் காண்பது, அவை பெரும்பாலும் வெவ்வேறு பெயர்கள் அல்லது […]

ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித்திட்டத்தின் 21-வது தவணையை முன்கூட்டியே மத்திய வேளாண் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் நேற்று விடுவித்தார். பி.எம்.கிசான் என்பது, சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6,000 பெறும் வகையில், இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவை வழங்குவதை […]

உலகிலேயே உயரமான சிகரமான எவரெஸ்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக தென் கொரிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளார். எவரெஸ்டுக்கு தெற்கே நேபாளத்தில் அமைந்துள்ள மேரா சிகரத்தின் (Mera Peak) உச்சிக்கு அருகில், பனிப்புயலில் சிக்கி ஒரு தென் கொரிய மலையேற்ற வீரர் உயிரிழந்ததாக நேபாள மலையேற்ற சங்கம் உறுதிப்படுத்தியது. சுமார் 21,250 அடி உயரம் கொண்ட இந்த சிகரத்தின் […]

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை, ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் சோர்வு, மாலைநேர குளிர், வறட்டு இருமல், சளியுடன் காய்ச்சல் பரவி வருகிறது. மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் இந்தக் காய்ச்சல் எளிதில் குணமாவதில்லை. சிலருக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் உடல் வலி, தொண்டை வலி […]

நீங்கள் குடிக்கும் பாட்டில் தண்ணீர் அல்லது ஆரோக்கியமான மீன் உங்கள் மனநிலையைக் கெடுக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம், இந்தப் பொருட்களில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் உடலுக்கு மட்டுமல்ல, மூளை மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக ஒரு புதிய ஆய்வு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. ஆராய்ச்சியின் படி, இந்த மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் நமது குடல் நுண்ணுயிரியைப் பாதிக்கின்றன, இது மனச்சோர்வு மற்றும் பெருங்குடல் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். […]

கரூர் துயரத்தால் முடங்கியிருக்கும் விஜய்யிடம், எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருமே நேரில் சென்று ஆறுதல் சொல்லிவிட்டனர். மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசனும் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல் பாஜக தலைவர் நட்டா […]

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர விடுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பார்ட்டி நடத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விருந்தில், பிரபல இசையமைப்பாளரின் மகள் உட்பட மொத்தம் 18 பேரை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த ஆடம்பர ஓட்டலில், போதைப் பொருள் பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, முன்தினம் நள்ளிரவில் போலீசார் […]