இந்தியாவில் கச்சா எண்ணெய் விலைக்கும் சில்லறை எரிபொருள் விலைக்கும் இடையிலான கூர்மையான வேறுபாடு ஒரு முக்கியமான கேள்வியை எடுத்துக்காட்டுகிறது.. குறிப்பாக ரஷ்யாவிலிருந்து கிடைக்கும் எண்ணெய் இறக்குமதியில் இருந்து உண்மையில் யார் பயனடைகிறார்கள்? என்பது தான் மிகப்பெரிய கேள்வி.. 2014 க்கு முன்பு, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலராக இருந்தன. அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை சராசரியாக லிட்டருக்கு ரூ.70-72 ஆக இருந்தது. இன்று, கச்சா எண்ணெய் […]

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.75,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு […]

பல முதியவர்கள் 60 வயதில் தங்கள் வேலையை விட்டு நின்றுவிடுகின்றனர்.. அல்லது வேலை செய்கிறார்கள். அதன் பிறகு, அவர்களுக்கு நிலையான வருமானம் இல்லை. இதனால் அன்றாட செலவுகளைச் சந்திப்பது கடினமாகிறது. இந்தப் பிரச்சனையைக் குறைக்க, மத்திய அரசு பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா (PMSYM) என்ற ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டம் யாருக்காக? இந்தத் திட்டம் குறிப்பாக முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. […]

ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. தற்போது, ரெப்போ விகிதம் 5.50% ஆக உள்ளது. இந்த நிலையில் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர், ஆகஸ்ட் மாத நாணயக் குழுக் கூட்டத்தில் (MPC) புதன்கிழமை, […]

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.75,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் […]

தொழில்வளம்‌ பெருகுவதற்கான இணக்கச்‌ சூழலை மேம்படுத்துவதிலும்‌ அதன்‌ மூலம்‌ கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும்‌ உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ ஒன்று, மத்திய அரசின்‌ 60% நிதிப்பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “பிரதமரின்‌ உணவுப்‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ ஒழுங்குபடுத்தும்‌ திட்டம்‌ ஆகும்‌. இந்த திட்டத்தின் கீழ் ரூ.40,000 வரை மானியம் வழங்கப்படும். […]

பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பரிசு காத்திக்கிறது.. ஜூலை முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில் அகவிலைப்படி (DA) 3% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகரிப்பு தற்போதைய அகவிலைப்படியை 55% இலிருந்து 58% ஆக உயர்த்தும். இது நாடு முழுவதும் உள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளின் மாதாந்திர சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை நேரடியாக பாதிக்கும். கடைசியாக 2% உயர்வு […]