லாக்அப் மரண வழக்கு விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றவர் அஜித்குமார். நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதே அஜித்குமாரின் மரணத்திற்கு காரணம் என்று குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.. […]

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் மரணம் ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், […]

சிவகாசி அருகே கோலுலேஸ் ஃபயர் வொர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் கோலுலேஸ் ஃபயர் வொர்க்ஸ் என்ற தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் உள்ளே பல […]

2024-2025 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 297 கோடி வழங்கி அரசாணை வெளியீடு. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளி வளர்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அல்லிகளின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 […]

swiggy, zomato போன்ற நிறுவனங்கள் கமிஷன் தொகையை குறைக்காவிட்டால் உணவு வழங்க மாட்டோம் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நவீன வாழ்க்கை முறைமையில், வீடிலிருந்தபடியே உணவு வாங்கும் வசதியால் ஆன்லைன் டெலிவரி செயலிகள் மக்களிடையே பிரபலமடைந்துள்ளன. ஆனால் சமீப காலமாக ஆன்லைன் தளங்களில் உணவுகளின் ரேட் அதிகரித்து வருகிறது. மேலும், டெலிவரி சார்ஜ், பிளாட்பார்ம் பீஸ், பேக்கிங் பீஸ் என ஏகப்பட்ட கூடுதல் கட்டணங்களையும் போட ஆரம்பித்தன. அதே […]

சென்னையில் 8 இடங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மயானங்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. எனினும் பல்வேறு […]

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களை முறைப்படுத்தும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப கால அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வித் தரத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பு கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் […]

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை ரூ.25,000 பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட போட்டித் தேர்வு பிரிவு, மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுக, தமிழக இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அகில இந்திய குடிமை பணி தேர்வு மையத்துடன் இணைந்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமை பணிகள் […]

தமிழகத்தில் அனுமதி அற்ற மனை பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள் இன்று முதல் விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025-2026-ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, […]