தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது.. ஆனால் தற்போதே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. முக்கிய கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரு கட்சிகளிலும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை நயினார் நாகேந்திரன் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.. மேலும் ஒவ்வொரு மாதமும் தமிழக பாஜக தரப்பில் மாநாடு நடத்தவும் […]

பிரபல கல்வியாளர் முனைவர் வசந்தி தேவி சென்னையில் காலமானார்.. அவருக்கு வயது 87. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன அறங்காவலராக இருந்த இவர் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார் வசந்தி தேவி.. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, துணைவேந்தராக 1992 முதல் 1998 வரை வசந்தி தேவி இருந்துள்ளார். 2002-2005 வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி இருந்துள்ளார். மாணவியருக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்திற்கு […]

தமிழ்நாடு அரசு திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வரின் பெயர் இடம் பெறக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில். முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என்றும், உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. சி.வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.. அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவின் […]

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.. திண்டுக்கலை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வானது உள்ளிட்டவற்றை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த தேர்வு முறை தவறானது என்றும், கட்சி விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி […]

அடுத்தடுத்து உயிரிழந்த அரசு பள்ளி மாணவர்களின் மர்ம மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடியில் செயல்பட்டு வரும் திருச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் எம்.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற மாணவர், அவரது விடுதி […]