தென்காசியை சேர்ந்த கண்ணன் (25) என்பவரும், கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த கலாசூர்யா (25) என்பவரும் சொரிக்காம்பட்டி கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளனர். கலாசூர்யாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முடிந்து விவாகரத்தான நிலையில், இரண்டாவது கணவர் மூலம் அவருக்கு சிவானி (2 வயது) என்ற பெண் குழந்தை இருந்தது. இதற்கிடையே, கண்ணனுக்கும் கலாசூர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், கலாசூர்யாவின் குழந்தை சிவானி தனக்குத் […]

நீலகிரியை சேர்ந்தவர் பிரவீன் (22). இவர், கோவையில் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், ஊட்டியில் தற்போது 10ஆம் வகுப்பு படிக்கும் 15 சிறுமியை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இதற்கிடையே, இருவருக்கும் மத்தியில் அடிக்கடி சண்டைகள் வரத் தொடங்கின. இதனால், இருவரும் தற்காலிகமாக பிரிந்துள்ளனர். இந்த சமயத்தில் தான் பிரவீனுக்கு, ஊட்டியில் படித்து வரும் கல்லூரி […]

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு […]

ராமநாதபுரத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற கார் ஒன்று, எதிரே வந்த மற்றொரு கார் மீது பலமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் கார்களில் பயணித்தவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த […]

தமிழகத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் 2021-ல் திமுக அரசு பொறுப்பேற்றவுடன், பொங்கலுக்கு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளை ஏப்ரல், மே மாதங்களில்தான் வழங்கி வருகிறது. மேலும், 50 சதவீதத்துக்கும் மேல் வெளி மாநிலங்களில் இருந்து முறைகேடாக வாங்கப்படுவதால், கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். […]

உலகெங்கிலும் உள்ள முருகப் பெருமானின் ஆலயங்களில், அவருக்கு மிகவும் பிரியமானதாகவும், அவரது திருவடிகள் பட்டதாகவும் கருதப்படும் இரண்டு முக்கியத் தலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று வள்ளியைத் திருமணம் செய்த வள்ளிமலை, மற்றொன்று திருவிடைக்கழி ஆகும். இவற்றுள் திருவிடைக்கழி முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த தலம் எனப் புராணங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. சூரனை வதம் செய்ததால் வந்த தோஷம் : திருச்செந்தூரில் சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின்னர், சூரபத்மனின் மகனான இரணியாசுரன் […]

பொதுவாக, சிவன் கோயில்கள் அனைத்திலும் வருடத்தில் ஒரே ஒரு முறை, அதாவது ஐப்பசி மாத பெளர்ணமி நாளில் மட்டுமே சிவலிங்க திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யும் அன்னாபிஷேக வைபவம் நடைபெறும். ஆனால், தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு சிவாலயத்தில் மட்டும், ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த சிறப்புக்குரிய ஆலயம் தான் திருவாரூரில் அமைந்துள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் ஆகும். அமாவாசை அன்னாபிஷேகத்தின் சிறப்பு […]

புதிய பாடப்புத்தக உருவாக்க பணியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 26-ம் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: பள்ளி கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை – 2025-ன்படி மேற்கொள்ளப்படவுள்ள புதிய பாடப்புத்தக உருவாக்கப் பணிகளில் தன்னார்வத்துடன் பங்கேற்க விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பவர்கள், தொடர்புடைய பாடத்தில் உரிய கல்வித்தகுதி […]

தமிழகத்தில் இன்று முதல் 11-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று முதல் 11-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் […]