தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2 கோடிக்கும் அதிகமான அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3,000 ரொக்கப் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.. ரொக்கப் பணம் மட்டுமன்றி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அட்டைகளை முறைப்படுத்துவதில் உணவுப் பொருள் வழங்கல் துறை தற்போது அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், நீண்ட நாட்களாகப் பயன்பாட்டில் இல்லாத மற்றும் போலி முகவரிகளில் இயங்கும் குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து அவற்றை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தொடர்ந்து 3 மாதங்களாக எவ்விதப் பொருட்களையும் […]
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வரும் வேளையில், அதிமுக-வின் உட்கட்சி விவகாரங்கள் மீண்டும் புதிய திருப்பத்தை எட்டியுள்ளன. குறிப்பாக, பிரிந்து கிடக்கும் நிர்வாகிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னெடுத்து வரும் சமரச முயற்சிகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. தென் மாவட்ட வாக்கு வங்கியை தக்கவைக்கவும், அதிமுக-வை பலமான சக்தியாக உருவெடுக்க வைக்கவும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி என்ற தாரக […]
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் கறையாக படிந்துள்ள கரூர் வேலுசாமிபுரம் சம்பவம் தொடர்பான விசாரணை, இப்போது டெல்லி சிபிஐ (CBI) தலைமையகத்தில் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் […]
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கான ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், தற்போது அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது. கடந்த டிசம்பர் 12, 2025 அன்று சென்னையில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். இதன் மூலம் கூடுதலாக 1,69,4339 பெண்கள் இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 1,30,69,831 பயனாளிகள் மாதம் 1,000 […]
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, புதுச்சேரி மற்றும் அதன் அண்டை மாவட்டமான காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த முன்னறிவிப்பை தொடர்ந்து, நேற்று இரவு முதல் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று காலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விடாது பெய்து வரும் இந்த மழையினால் சாலைகளில் வெள்ளம் […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடப் பங்கீடு தொடர்பான விவாதங்கள் இப்போதே அனல் பறக்க ஆரம்பித்துள்ளன. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்பே அதிமுக தலைமைக்கு அதிரடியான சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, வரும் தேர்தலில் தேமுதிக போட்டியிட 30 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதோடு, ஒரு […]
தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீண்டும் ஒருமுறை இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைக்கு ஆளாகியிருப்பது கடலோர கிராமங்களில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நேற்று முன்தினம் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள், மன்னார் வளைகுடா மற்றும் நெடுந்தீவு அருகே தங்களது மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டியதாகக் குற்றம் சாட்டி […]
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், தவெக நிர்வாகிகள், கரூர் மாவட்ட காவல்துறையினர், பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என பலேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.. கரூரில் உள்ள […]

