இந்தியா, கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சில இடங்களில் இன்னும் நரபலி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகள் போன்ற விஷயங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி, 2014 முதல் 2021 வரை, இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட நரபலிகள் மற்றும் 397 சூனியம் தொடர்பான கொலைகள் நடந்துள்ளன. இவ்வளவு ஏன், கல்வியில் சிறந்து விளங்கும் கேரளாவில், பணக்காரனாக வேண்டும் […]

தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 30 சதவீதம் வரை, பதிவுத்துறை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பு என்பது தமிழ்நாட்டில் தமிழ்நாடு பதிவுத் துறையால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சொத்து மதிப்பாகும், இது முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களைக் கணக்கிடப் பயன்படுகிறது. இதை TNREGINET வலைத்தளம் வழியாகச் சரிபார்த்து, நிலத்தின் வழிகாட்டி மதிப்பை அறியலாம். தமிழகத்தில் நிலங்களுக்கு, ‘சர்வே’ எண் மற்றும் தெரு வாரியாக வழிகாட்டி […]

இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, பெண் தெய்வ வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு 9 நாள் விழாவாகும். வட இந்தியாவில் ஒருவிதமாகவும், தமிழ்நாட்டில் வேறுவிதமாகவும் கொண்டாடப்படும் இந்த விழாவின் முக்கியச் சிறப்பம்சம், கோவில்களில் அமைக்கப்படும் நவராத்திரி கொலு தான். “கொலு” என்பது, மரப் பலகைகள் அல்லது உலோக சட்டங்களால் ஆன படிகளில் கடவுள்கள், தெய்வங்கள் மற்றும் கலாச்சார பொம்மைகளை வரிசையாக அடுக்கி, ஒரு தெய்வீகக் காட்சியை உருவாக்குவதை குறிக்கிறது. […]

காந்தி ஜெயந்தி தினத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல், பள்ளி வளர்ச்சி, கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு குறித்து பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து ஊராட்சிகளிலும் […]

தமிழகத்தில் வரும் 26, 27 தேதிகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. செப்.25ம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று […]

திருச்சி திருவெறும்பூர் அருகேபாதாள சாக்கடையில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கார்மல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை தூய்மை பணியில் ரவி, பிரபு  ஆகிய துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது விஷ வாயு தாக்கியதில் ரவி, பிரபு ஆகியோர் மயக்கமடைந்த நிலையில் குழிக்குள் விழுந்தனர்.. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலறிந்து அங்கு விரைந்த […]

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த இளத்தூர் கிராமத்தில் சினிமாவை மிஞ்சும் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 30 வயதான பேச்சியம்மாள் என்பவரது கணவர் கோவையில் எலக்ட்ரிஷியன் வேலை பார்த்து வந்த நிலையில், அந்தப் பெண் எதிர்வீட்டில் வசித்த தனது மாமன் மகன் மாடசாமியுடன் கள்ள உறவில் இருந்து வந்துள்ளார். இந்த கள்ளக்காதல் ஜோடி, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனைக் கவனித்த மாடசாமியின் தாய் […]

சென்னை பெருங்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் 28 வயதான அன்பு கணபதி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜதுரை என்பவரின் மனைவிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்த நிலையில், கடும் சண்டை நடந்துள்ளது. பின்னர், நடந்த பேச்சுவார்த்தையில், இனி மதுவுடன் பேசக் கூடாது என அன்பு கணபதியை கண்டித்து அனுப்பியுள்ளனர். இதற்கிடையே, ராஜதுரை தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கோபத்தில் மனைவி […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அரசியல் தலைவர்கள் இப்போதே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.. இந்த சூழலில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்று கூறி ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது அரசியலில் பெரும் […]