மாதவிடாய் காலத்திலும் தொடர்ந்து உல்லாசத்திற்கு அழைத்த கள்ளக்காதலனை, கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அரவிந்த். இவருக்கு வயது 29. இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அரவிந்த் – ஜான்சி தம்பதிக்கு சாரிகா (வயது 4) என்ற பெண் […]

சேலம் மாவட்டத்தில் அரசு கல்லூரி வளாகங்களில் சிறுதானிய உணவகம் அமைத்திட விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட அறிவிப்பில்; தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் அவர்களின் 2025-2026 ஆம் ஆண்டு செயல்திட்டத்தில், சேலம் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் அரசு கல்லூரி வளாகங்களில் சிறுதானிய உணவகம் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மேட்டூர் அரசுக்கலைக்கல்லூரி, சேலம் […]

திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: வடக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தவிர. வடமேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, வட […]

திருச்சி டிஐஜி வருண்குமார் உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார், ஊர்க்காவல் படையின் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ஆயுஷ் மணி திவாரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் (சென்னை) கூடுதல் காவல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி வி.ஜெயஸ்ரீ, […]

எம்எட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20-ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி ஆக. 20-ம் தேதி வரை […]

இந்த ஆண்டுக்கான ‘டெட்’ தகுதித் தேர்வு நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதி நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் உடனடியாக தொடங்கியது. தமிழகத்தில் பதவி உயர்வுக்கும் டெட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், டெட் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என பணியில் உள்ள ஆசிரியர்களும், அரசு பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில, டெட் […]

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் 47 வயதான பிரமிளா. இவர், கணவர் ராமச்சந்திரனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்து தனது 3 மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை சமாளித்து வந்துள்ளார். பிரமிளாவின் இளைய மகன் முகில் (19) கடந்த சில மாதங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். மேலும், குடித்துவிட்டு தினமும் வீட்டு தகராறு செய்து […]

தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், இதை தவறான நோக்கத்தில் பயன்படுத்தும் மோசடிக் கும்பல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மோசடிக்காரர்கள், தனிமையில் இருப்பவர்களை குறிவைத்து, டேட்டிங் செயலிகள் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகின்றனர். அந்த வகையில், “கால் பாய் மோசடி” என அழைக்கப்படும் மோசடி முறையானது சென்னையில் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. தென் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், வேலைவாய்ப்பு தேடி […]