சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.73,680 விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், […]

மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் செயல்திறன் குறித்து கலவையான கருத்துகளை பெற்றதாக, சமீபத்தில் நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தனியார் செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்படி, பங்கேற்றவர்களில் 49% பேர் தற்போதைய அரசின் செயல்பாடுகளில் திருப்தியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது, அரசு எடுத்துள்ள பல திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதை பிரதிபலிக்கின்றது. மேலும், பங்கேற்றவர்களில் 17% பேர் ஓரளவு […]

நடப்பு கல்வியாண்டுக்கான (2025 – 26) பொதுத் தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2026 மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து பொதுத் தேர்வு துவங்கி ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரையில் நடைபெறவுள்ளது. பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ள நாட்காட்டியின் படி மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு, காலாண்டு செப்டம்பர் […]

டிஎன்​பிஎஸ்சி தேர்வு எழுதும் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான இலவச பயிற்சி வகுப்​பு​கள் சென்​னை​யில் நடக்கிறது. தகு​தி​யுள்ள மாற்​றுத்திற​னாளி​கள் வகுப்பு​களில் பங்​கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் அனைத்து வகை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நடத்தப்படும் குரூப்-2, 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு […]

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் அடித்துக் கொன்ற வழக்கில், நகை திருட்டு புகார் கொடுத்த கல்லூரி பேராசிரியை திருமங்கலம் நிகிதா, அவரது தாயார் சிவகாமியிடம் சிபிஐ அதிகாரிகள் மதுரையில் 2-வது முறையாக விசாரித்தனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வந்த கோவில் காவலாளி அஜித் குமார், அங்கு சாமி கும்பிட வந்த நிகிதா என்னும் பெண்ணின் நகை காணாமல் போன வழக்கில், […]

களஞ்சியம் ஆப் மூலம் ஊதியம் அல்லாத பிற நிதிகளை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் என 13 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். அரசு பணிகள் திறம்பட நடப்பதற்கு தற்போது ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் என்ற சாப்ட்வேர் பயன்பாட்டில் உள்ளது. அரசு சம்பளம் பெறுவோருக்கு இந்த சாப்ட்வேர் மூலம் […]

“நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட் மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சிக்காக கூகுள், யூனிட்டி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தில், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திறன்சார்ந்த பயிற்சிகள் பெற்று வருகின்றனர். மேலும் தமிழக மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் […]

தமிழகத்தில் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. […]