நுரையீரல் புற்றுநோய் என்பது உலகளவில் அதிக உயிரிழப்புக்கு காரணமான நோய்களில் ஒன்றாகும். பொதுவாக, புகைப்பிடிப்பவர்களுக்கே வரும் நோயாக கருதப்பட்டாலும், புகைப்பிடிக்காதவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். நுரையீரல் புற்றுநோய் என்றால் பெரும்பாலானவர்கள் உடனே நினைப்பது சிகரெட் புகைப்பதைத்தான். உலகளவில் புகைப்பிடித்தல் இந்த நோய்க்கான முக்கிய காரணமாக இருந்தாலும், புகைபிடிப்பவர்களுக்கு மட்டுமே இந்த நோய் வரும் என்பது தவறான நம்பிக்கை. சிகரெட்டை தொட்டுக் கூட பார்க்காத பலரும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து […]

சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி செயல்படுகின்றன. அதேபோன்று, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் […]

தமிழகத்தில் இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒருசில […]

வளிமண்டல மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 15-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் […]