தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக கூட்டணி அப்படியே தொடரும் நிலையில், கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் இந்த முறை கூடுதல் இடங்களை கேட்போம் என்று அறிவித்துள்ளன. மறுபுறம், அதிமுக மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது.. எனினும் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா தொடர்ந்து கூறி வரும் நிலையில், தனித்த ஆட்சி என்று இபிஎஸ் கூறி […]

சீமான் செய்து வரும் கோமாளித்தனங்களை இளைஞர்கள் எச்சரிகையுடன் புரிந்து கொள்ள வேண்டும் என்று வன்னி அரசு தெரிவித்துள்ளார் ஆடு மாடுகளுக்கான மாநாட்டை தொடர்ந்து மரங்களுக்கான மாநாடு நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பை விசிக பொதுச்செயலாளர் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நாதக மற்றும் கோனார் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆடு […]

தவெக தலைவர் விஜயுடன் அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.72,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் […]

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவின் டி.எஸ்.பி சுந்தரேசன், அலுவலக வாகனம் இல்லாமல் நடந்தே பணிக்குச் சென்ற வீடியோ வைரலான நிலையில், நேர்மையாக இருப்பதால் தான் தனக்கு இத்தனை சிக்கல் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கொலை வழக்கிலும், பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான என்கவுன்டரிலும் விசாரணை செய்ததற்குப் பின்னர், சுந்தரேசன் மயிலாடுதுறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு பொறுப்பேற்றதிலிருந்து கள்ளச்சாராயம், மதுபான […]

கோவையில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அற நிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். சூலூரை சேர்ந்த சுரேஷ் என்பவரின் தனியார் கோயில் நிதி பிரச்சனையை தீர்த்து வைக்க அற நிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதில் ரூ.1.5 லட்சத்தை முதலில் கொடுப்பதாக கூறியுள்ளார். ரசாயணம் தடவிய லஞ்ச பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச […]

திருவள்ளூர் மாவட்டம் செம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் இரும்பு உற்பத்தி ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர், தீ அருகிலுள்ள பிற கட்டமைப்புகளுக்கும் பரவி வருவதால் உயிரிழப்பு ஏற்படும் அச்சம் நிலவுகிறது. செய்தி நிறுவனமான PTI பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான கரும்புகையுடன் தீப்பிழம்புகள் வெளியேறுவதைக் காட்டுகிறது. தொழிற்சாலையில் உள்ள பெரும்பாலான பொருட்கள் […]

திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதற்கு பதிலடியாக அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பலர் இரவோடு இரவாக திமுகவில் இணைந்தனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கிய நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் நிலைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின், கட்சியிலும் […]