அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராஜலட்சுமி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஞானசேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆன்லைன் வாயிலாக முதல்கட்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஞானசேகரனுக்கு மட்டுமே தொடர்பு உள்ளது […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : Bharat Electronics Ltd (BEL) வகை : மத்திய அரசு மொத்த பணியிடங்கள் : 20 பணியின் பெயர் : இன்ஜினியர் (தரக்கட்டுப்பாடு), சூப்பர்வைசர் (தரக்கட்டுப்பாடு) கல்வித் தகுதி : * இன்ஜினியர் […]
பொதுவாக, அனைத்து வங்கிகளிலும் ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டும் என்பது வங்கியின் விதிமுறைகள் ஆகும். அப்படி, பராமரிக்காத பட்சத்தில் அதற்கு தனி அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் வங்கியை பொறுத்து மாறுபடும். இந்நிலையில் தான், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை பொதுத்துறை வங்கியான கனரா வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி, கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் […]
தமிழ்நாட்டில் ஒருவழியாக கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்புகின்றனர். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இறுதி ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கியது. கிட்டத்தட்ட 45 நாட்களாக மாணவர்கள் இந்த கோடை விடுமுறையை கொண்டாடி வந்தனர். மேலும் இதனால் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் அதிகளவில் கூட்டம் கூடியது. இந்த சூழலில் தான், கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள் […]
ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொண்டால், அன்புமணிக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி கூறியுள்ளார். தந்தை ராமதாஸ் – மகன் அன்புமணி இடையே நீண்ட நாட்களாக புகைந்து கொண்டிருந்த பிரச்சனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெடித்தது. பாமக தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் வகித்து வந்த இளைஞரணி தலைவர் பதவி, மகள் வழி பேரன் முகுந்தனுக்கு கொடுத்தார் ராமதாஸ். ஆனால், இதற்கு […]
வருமான வரி ITR தாக்கல் செய்வது தொடர்பாக இந்தாண்டு தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அனைத்து ஆவணங்களும், விவரங்களும் சோதனை செய்யப்படும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதாவது, ரூ.1 லட்சத்திற்கும் மேல் வீட்டு வாடகை இருந்தால், நீங்கள் தரக்கூடிய பான் கார்டை வைத்து சோதனை செய்வார்கள். நீங்கள் சொல்லும் வாடகைக்கு கணக்கு சரியாக உள்ளதா என சோதனை நடத்தப்படும். நீங்கள் கணக்கு காட்டும் முதலீடுகள் உண்மையானதா என்று முறையாக ஆய்வு […]
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசேகரனின் தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது சென்னை மகளிர் நீதிமன்றம். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச.23 அன்று 19 வயதான 2-ம் ஆண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின்பேரில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அதேபகுதியில் பிரியாணி கடை நடத்தி […]
கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, “பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்தால் பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தி மாணவர்களை பேருந்தின் உள்ளே வரவழைத்த பின் பேருந்தை இயக்க வேண்டும்” என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு திறப்புக்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. முதல் […]
தமிழகத்தில் இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும், வரும் 3 முதல் 7-ம் தேதி வரை […]
முதல்வரின் காலை உணவு திட்டத்தில் திங்கள்தோறும் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் – சாம்பார் வழங்கப்படும் என்ற சட்டமன்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நல துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு சமூகநல துறை ஆணையர் ஆர்.லில்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; முதல்வரின் காலை உணவு திட்டத்தின்கீழ் திங்கள்கிழமை வழங்கப்படும் உணவு வகைகளில், காய்கறி […]

