தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், திமுகவின் சீனியர் அமைச்சர்களில் ஒருவரான கே. ராஜகண்ணப்பன் பேசிய பேச்சு, தற்போதைய கூட்டணியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய அவர், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மிக கடுமையாகச் சாடியுள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு, குறிப்பாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையையும், சமீபகாலமாக ‘ஆட்சியில் பங்கு’ கேட்டு […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றனர். வழக்கமாக மே மாதத்தில் நடைபெறும் தேர்தல், இந்த ஆண்டு ஒரு மாதம் முன்னதாகவே, அதாவது ஏப்ரல் மாதத்திலேயே நடத்தி முடிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் […]
தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணியில் நிலவும் இழுபறி நிலைக்கு மத்தியில், டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கும் இந்தச் சந்திப்பில், திமுகவுடனான தற்போதைய கூட்டணிச் சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் தரப்பில் இந்த […]
தேமுதிக-வின் கூட்டணி குறித்த இழுபறி நிலை நீடித்து வரும் சூழலில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது பாணியில் அக்கட்சியை மிக கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேமுதிக-வின் கூட்டணி முடிவு இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது. இது குறித்து சாடியுள்ள ப்ளூ சட்டை மாறன், “உங்களுக்கு என ஒரு கொள்கை இருந்தால் இந்நேரம் சரியான கூட்டணியை தேர்வு செய்திருப்பீர்கள். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு […]
தமிழகம் முழுவதும் நிரப்பப்படாமல் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக அவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகம் முழுவதுமுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளின் பல்வேறு துறைகளில், சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்களை, கடந்த ஜனவரி 31 அன்று பணிநீக்கம் செய்துள்ள […]
தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பேரணியுடன் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி பல கூட்டணித் தலைவர்களுடன் கலந்து கொண்டார். ஆளும் திமுக அரசாங்கத்தை எதிர்த்து களமிறங்கும் நிலையில், இந்த பேரணி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.. பல வருட போட்டிக்குப் பிறகு மாநில அரசியலில் ஒரு மாற்றத்தைக் குறிக்கும் வகையில், அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் அமமுக தலைவர் டிடிவி […]
விஷப் பூச்சி, பாம்புக் கடியால் உயிரழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கான உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் , நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும், வரும் […]
பறவைக் காய்ச்சல் என்பது ‘இன்ஃப்ளூயன்ஸா A’ வகை வைரஸால் உண்டாகும் ஒரு தீவிர தொற்று ஆகும். பொதுவாக காட்டுப் பறவைகளிடம் காணப்படும் இந்த வைரஸ், அவற்றின் எச்சில், மலம் மற்றும் உடல் சுரப்புகள் மூலம் கோழிப் பண்ணைகளுக்கும், பரவும் அபாயம் கொண்டது. மனிதர்களுக்கு இது அரிதாகவே பரவினாலும், பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள், குறிப்பாக பண்ணைத் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த சூழலில் சென்னையில் காகங்கள் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பிம்பலூர் கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் பச்சிளம் ஆண் குழந்தை முட்புதரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிம்பலூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் – கோவிந்தம்மாள் தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் கடந்த 16 மாதங்களாக மாலத்தீவில் வேலை பார்த்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்புதான் ஊருக்கு திரும்பி உள்ளார். அப்போது தனது […]

