தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயனம் சென்று திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5000/- வரை நேரடியாக மானியம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டைச் சேரந்த 150 பௌத்தநபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-2026 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயனம் சென்று […]

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் ராட்வீலர் போன்ற வெளிநாட்டு ரக நாய்கள் தொடர்பாக முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். “ராட்வீலர் போன்ற ஆபத்தான நாய் இனங்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. எனவே வாய் மூடி இன்றி இந்த நாய்கள் வெளியில் அழைத்துவரப்படக் கூடாது” எனக் கோரப்பட்டிருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி […]

இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, […]

தமிழகம் முழுவதும் இன்று 12,525 கிராமங்களில் உள்ள ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், […]

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: 10-ம் வகுப்பு துணை தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. அத்தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் விடைத்தாள் நகலை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அப்போது, தங்கள் […]

அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை நிர்ணயம் செய்வது தொடர்பாக வழிகாட்டுதல்கள் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2025-26) கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில் உள்ள மாணவர் […]

நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.. தமிழ்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரிய தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் […]

தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த போது, கைதான வழக்கறிஞர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.. தமிழக அரசு போராட்டக்காரர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.. எனவே தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.. எனினும் […]