தருமபுரி மாவட்டத்தில் வீடு காலி செய்தபோது இரும்பு பீரோ மின்கம்பியில் உரசியதில் 3 பேர் பலிதாபமாக உயிரிழந்தனர். தருமபுரி அருகே சந்தேப்பேட்டையைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் 2வது மாடியில் குடியிருந்தவர்கள் இலியாஸ் பாஷா மற்றும் குடும்பத்தினர். 9 ஆண்டுகளாக வசித்துவந்த நிலையில் வேறொரு வீட்டிற்கு செல்ல ஏற்பாடுகள் செய்தார். இவரது 2 மகன்களும் வெளியூரில் வேலைபார்த்து வருகின்றனர். வாடகை வீட்டில் இருந்து உடமைகளை எடுத்துக்கொண்டு புதிய […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
புதிய வகை வைரஸ் காய்ச்சலால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அதிகளவில் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் தற்போது இன்புளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, இந்த வகை வைரஸ் காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வைரஸ் காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் […]
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற போதுமான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். காரைக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் கட்சி மற்றும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் இருந்து மதுரை வந்தார். பின்னர் மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், […]
சென்னையில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் 70 வயது பாட்டியை பேரனே சுத்தியால் அடித்துக் கொன்ற பயங்கரம் நடந்துள்ளது. சென்னை கொருக்குபேட்டையில் கருமாரியம்மன் நகரில் தனியாக வசித்து வந்தவர் விசாலாட்சி (70) . இவரது மகள் அமுதா. அதே பகுதியில் வேறொரு வீட்டில் வசித்து வருகின்றார். அமுதாவின் மகன் சதீஷ்.. சில நாட்களுக்கு முன்பு அமுதாவிற்கு ஒரு லட்சம் ரூபாய் விசாலாட்சி கொடுத்துள்ளார். அதை திருப்பித்தரவேண்டும் என்று […]
தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட குழு அமைக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் செந்தில் முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. […]
அருப்புக்கோட்டை நகர காவல்துறையின் விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் தங்கப்பாண்டியின் உடலை 2 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ள உறவினர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த தங்கமாரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது இளைய மகன் தங்கப்பாண்டிக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 13ஆம் தேதி அருப்புக்கோட்டை நகர காவல்துறையினர் எனது மகனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மறுநாள் செப்டம்பர் 14ஆம் […]
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக செப்டம்பர் 22, 23ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 24 முதல் […]
மாடலிங் துறையில் விருப்பம் உள்ள பெண்ணிடம் கவர்ச்சிகரமான புகைப்படத்தை பெற்றுக்கொண்டு ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஆண்டு வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் மனு அளித்திருந்தார். அதில், தனக்கு மாடலிங் துறையில் விருப்பம் அதிகமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் அப்பொழுது தன்னுடைய தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்ததாகவும் […]
நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி வைத்து கொள்ளலாம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் கல்லுக்குழி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில், தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ரேஷன் பொருள் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர், ரேசன் பொருட்கள் தேவையில்லை என்றால் அவர்களுக்கு கெளரவ அட்டை என்கிற முறை உள்ளது என்றார். இதனை […]
ஆம்னி பேருந்துகளில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பதை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகைகள், தொடர் விடுமுறை நாட்களில் வெளியூர்களில் தங்கி இருப்போர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.. இதனால் வழக்கத்தை விட இந்த நாட்களில் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதும். இந்த நேரங்களில் ஆம்னி பேருந்துகளில் 2 மடங்கு அல்லது 3 மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.. அந்த […]