மதுரையில் வரும் 2024ம் ஆண்டுக்குள் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனால் இது உலக பிரசித்தி பெற்றதாக உள்ளது. அனைவரும் கண்டுகளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதற்காக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்ய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
திண்டுக்கல் அருகே பட்டியலினத்தவருக்கு வாடகைக்கு வீடு கிடையாது என்ற வீட்டு உரிமையாளர் பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நாயக்கனூர் பகுதியில் வாடகைக்கு வீடு தேடி ஒருவர் சென்றுள்ளார். அங்கிருந்து ஒரு வீட்டு வாசலில் நின்று வாடகைக்கு வீடு கேட்டுள்ளார். வீட்டு உரிமையாளரான மூதாட்டி அவரிடம் நீங்கள் என்ன சாதி, ? எனக் கேட்டுள்ளார். நான் என்ன சாதி என கேட்கின்றேன் என நீங்கள் தவறாக […]
ஒசூரில் செயல்பட்டு வரும் ஏகே ஸ்டாக் நிறுவனத்தில் பிட்காயின் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து அந்நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒசூரின் பிரதான பகுதியில் ஏ.கே.ஸ்டாக் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. அருண்குமார் என்பவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இதில் பிட்காயினில் முதலீடு செய்வதால் விரைவில் பணம் இரட்டிப்பாக்கிக் கொடுக்கப்படும் எனக்கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. போச்சம்பள்ளியைச் சேர்ந்த சுதாகர் மற்றும் லட்சக்கணக்கில் […]
தமிழக்தில் அனைத்து பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து வாரந்தோறும் பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது. பள்ளி மாணவர்களுக்கு தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் அக்டோபர் மாதத்தில் இருந்து வாரம் தோறும் புதன் கிழமைகளில் தடுப்பூசி போடப்பட உள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் , ’’ அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவே மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் […]
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் அறிவியல் பிரிவு அதிகாரி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் 50 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றான். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் பிரிவு அதிகாரியாக பணியாற்றிய அசோகன் கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் கைகா அணுமின்நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்று 1ம் தேதி கர்நாடகம் சென்றுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். கூடங்குளத்தில் […]
சேலத்தில் இருந்து சென்னை புறப்படவிருந்த பேருந்தில் ஏறிக்கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி அதி பயங்கரமாக மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கம் பாளையத்தைச் சேரந்த திருநாவுக்கரசு (65) , ரவிக்குமார் (41) , செந்தில் வேலன் (40 ) , சுப்பிரமணி (40) உள்பட 7 பேர் சென்னை சென்றுகொண்டிருந்தனர். இவர்களின் உறவினர் சென்னையில் இருக்கின்றார். அவர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழா […]
கமல்ஹாசனுக்கு இப்போதுதான் கோவை தெற்கு தொகுதி ஞாபகம் வந்துள்ளதாகவும், தொகுதி மக்களின் மனுக்களை வாங்கிக் கொண்டு அதனை பிக்பாஸில் வைத்து தீர்க்கலாம் என நினைக்க கூடாது என்றும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். கோவை மாவட்டம் சிவனந்தகாலனி பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும் தூய்மை பணியில் […]
‘வேட்டையாடு விளையாடு’ சினிமா பாணியில் சென்னை மென்பொறியாளர் ஒருவர் தனது முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி ஹீலியம் வாயுவை சுவாசித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள தோட்டக்காட்டூரை சேர்ந்த திருவேங்கடசாமி – மரகதமணி தம்பதியரின் மகள் இந்து. இவர், கோவையில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், நல்லகண்டன் பாளையத்தை சேர்ந்த மென்பொறியாளர் விணுபாரதிக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. […]
மாணவர் சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வேளாண்மை பாடத்தை கூடுதலாக மேல்நிலை பள்ளிகளில் தொழிற்பாடப் பிரிவாக அறிமுகப்படுத்தி 300 வேளாண்மை பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது. இவற்றில் மாணவர் சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) மூலம் தெரிவு செய்து நியமனம் செய்யப்பட்டவர்கள், ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் […]
ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அடுத்த மாதம் 28-ம் தேதி நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . தருமபுரி மாவட்டத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் சென்னை ஓய்வூதிய இயக்குநர் அவர்களால் 28.10.2022 அன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று […]