தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு 17 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். கோவை , பொள்ளாச்சி, மேட்டுப் பாளையம் , ஈரோடு உள்ளிட்ட பா.ஜ. அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடு, கார் மற்றும் கடைகளுக்கு பெட்ரோல் கு ண்டு வீசப்பட்டது. தீவைப்பு சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்றன. இந்நிலையில், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைச் […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
குழந்தையை மீட்டுத் தர வேண்டும் என தாய் தொடர்ந்த வழக்கில் தந்தையிடம் குழந்தை வளர்வது சட்ட விரோதம் கிடையாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா அமிர்தநாயகம் என்பவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இருவருக்கும் 10வயதில் மகன் இருக்கின்றான். இந்நிலையில் தம்பதி பிரிந்ததால் மகன் அவனது தந்தையோடு வசித்து வருகின்றான். இந்நிலையில் ஜெயசித்ரா, தன் மகனை கணவரிடம் இருந்து மீட்டு […]
குழந்தை தந்தையிடம் வளர்வது சட்டவிரோதம் இல்லை என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஜெயசித்ரா அமிர்தநாயகம் என்பவர், தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஒரு 10 வயது மகன் இருக்கிறான். தம்பதிகள் பிரிந்ததால் மகன், தந்தையோடு வசித்து வருகிறான். இந்நிலையில் ஜெயசித்ரா, சமீபத்தில் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது 10 வயது மகனைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த பாளையங்கோட்டை அனைத்து மகளிர் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,777 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 23 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,196 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை பாதுகாக்க திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2016-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்திட தருமபுரி மாவட்டத்தில் பஜாஜ் அலையன்ஸ் […]
தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். மேலும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது […]
கோவையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கோயம்புத்தூர் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, காவல்துறையுடன் இணைந்து சட்டம் மற்றும் ஒழுங்கினை கண்காணிக்கவும் பாதிப்புகள் ஏதும் ஏற்படா வண்ணம் அனைத்து முன்னேற்பாடுகளும் […]
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த இன்று தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் கட்டுபடுத்திட தமிழக முதல்வர் ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்” நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி என்ற நோக்கில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா […]
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு , புதுவை, காரைக்கால்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ’’ 24.9.2022 முதல் 26.9.2022 வரை தமிழ்நாடு […]
சென்னையில் செப்டம்பர் 26ம் தேதி முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக செப்டம்பர் 26ம் தேதி திங்கள் கிழமை மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் 26ம் தேதி காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு […]