விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நர்சிங் பட்டதாரி பெண்ணை தந்தை மற்றும் அண்ணனே கத்தியால் குத்திக் கொலை செய்த ஆணவக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப கௌரவத்திற்காக கட்டாயத் திருமணம் செய்ய முயன்ற நிலையில், இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகள் பிரியங்கா (24), நர்சிங் படிப்பை முடித்துவிட்டுத் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருக்கு […]

தமிழகத்தில் 2025-26ஆம் கல்வியாண்டின் மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் விநியோகம் செய்யும் பணிகளைப் பள்ளிக்கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பத் தேவையான புத்தகங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், விநியோக மையங்களில் புத்தகங்கள் முறையாகப் பெறப்பட்டுள்ளதா என்பதை […]

தமிழகத்தின் பொருளாதார கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கோடும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் ‘தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ (Tamil Nadu Women Entrepreneurship Development Scheme) பெரும் எழுச்சியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) துறைகளில் பெண்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் சுமார் […]

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் புதிய திருப்பங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தல் களத்தைச் சந்திக்கத் தயாராகி வருவதால், எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. இந்நிலையில், தவெக-வின் உயர்மட்ட நிர்வாகக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுக உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக-வின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பல தகவல்களைப் பகிர்ந்து […]

பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் தனது கட்சி அலுவலகத்தில் பெரியாரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 1879-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்த பெரியார், தமிழ்நாட்டின் சமூக நீதி கொள்கைகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார்.. சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, பெண் கல்வி, சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு சிந்தனைகளுடன் தனது வாழ்நாள் முழுவது போராட்டங்களை நடத்தியவர்.. மக்களிடையே சமத்துவம் மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை […]

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார்.. கூலித் தொழிலாளியான இவருக்கு 14 வயதில் மகள் இருக்கிறார். அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து இசக்கி முத்து தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.. இவர் தொடர்ந்து தனது மகளிடம் அத்துமீறி வந்ததாக கூறப்படுகிறது.. ஒருகட்டத்தில் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரை அரசு மருத்துவமனைக்கு இசக்கி முத்து அழைத்து சென்றுள்ளார். மருத்துவ சோதனையில் சிறுமி […]

சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில் தமிழக காவல்துறை சார்பில் தேசிய அளவிலான யுக்தி 2.0 என்ற சைபர் ஹேக்கத்தான் நடத்தப்பட்டது. தமிழக காவல்துறை இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் “ பெருகி வரும் சைபர் குற்றங்கள் மட்டுமல்லாது தற்போது மரபுவழி குற்றங்களில் கூட இணைய வெளியைப் பயன்படுத்தி எதிரிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தல் என்று, அனைத்து வகையான குற்றங்களிலும் இணைய பயன்பாடு பெருமளவு உள்ளது. வழக்குகளை விசாரிப்பதிலும், […]

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய திருப்பமாக ‘நமது மக்கள் முன்னேற்றக் கழகம்’ (நமமுக) இணைந்துள்ளது. தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டு வரும் சூழலில், திமுக கூட்டணியின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த அரசியல் நகர்வு அமைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில், நமமுக நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா மற்றும் கட்சியின் […]

கரூரில் துயர சம்பவத்திற்கு பின் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்பட்டது.. ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விஜய்யை அழைத்து பேசியதே இதற்கு காரணம்.. மறுபுறம் திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்படுகிறோம் என்ற குற்றச்சாட்டு காங்கிரஸின் சில மூத்த தலைவர்களிடையே ஒலிக்கிறது. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் தவெகவை அணுகலாம் என்ற தகவல்கள் வெளியான வண்ணம் […]