கோவையில் 10 சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் […]

கோவை அருகே சூலூரை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன் தினம் மாலையில் கடைக்கு சென்றார்.. அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.. இந்த சூழலில் சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் நேற்றிரவு சிறுமி சடலமாக […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன.. இதன் மூலம் தமிழகத்தில் 1952-ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.. தமிழ்நாடு அமைச்சரவையில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 8 பட்டியலின எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றுள்ளனர்.. அதே போல் 4 பெண் அமைச்சர்களும் இடம்பெற்றனர்.. இந்த அமைச்சர்களின் ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்.எல்.ஏ ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.. ரமேஷ் […]

திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாக்குப்பதிவு நாளில் தாக்குதல் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் திமுகவின் சேகர் பாபு ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குச்சாவடிக்கு வெளியே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. […]