விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையே 193 கிமீ தொலைவிற்கு இரட்டை ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த விரிவான செயல்திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையே ரயில்போக்குவரத்து மேலும் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே தஞ்சாவூர் – […]

தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும். இன்று காலை திருப்பத்தூர், தருமபுரியில் 17 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும், நாளை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு […]

கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்கள் டிசம்பர் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு […]

தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும்வகையில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பெண்கள் […]

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் 17 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று ரூ.1,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் சுமார் 1 கோடியே 13 லட்சம் பெண்கள் இந்த உரிமைத் தொகையைப் பெற்றுப் பயனடைந்து […]

சென்னையில் 12ஆம் வகுப்பு படித்து வரும் எஸ்தர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியின் தாயார், தனது தோழி கற்பகத்திற்கு உதவுவதற்காக மகள் எஸ்தரை நகை எடுத்துச் செல்லும்படி அனுப்பியுள்ளார். கிழக்கு தாம்பரம் அருகே கற்பகத்தின் மகள் சந்தியாவை சந்தித்த எஸ்தர், இருவரும் சேர்ந்து நகையை அடமானம் வைத்து ரூ.30,000 பெற்றுள்ளனர். அதன் பிறகு, சந்தியா, எஸ்தரை இரும்புளியூரில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த சந்தியாவின் தந்தை சங்கர், […]

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பிறகு, காளியம்மாளின் அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, அவர் விரைவில் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் இணையப் போவதாகச் சமீப காலமாக செய்திகள் உலா வந்தாலும், இது குறித்து அவரது தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தச் சூழலில், காளியம்மாள், பல்வேறு அரசியல் கட்சிகள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தான் […]

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் 17 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று ரூ.1,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் சுமார் 1 கோடியே 13 லட்சம் பெண்கள் இந்த உரிமைத் தொகையைப் பெற்றுப் பயனடைந்து […]

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பூச்சூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும், அவரது மனைவி ரம்யாவுக்கும் (26) எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ரம்யா மீண்டும் கர்ப்பமானார். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி ரம்யா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக அவரது கணவர் கண்ணன் உறவினர்களிடம் கூறி நம்ப வைக்க முயன்றுள்ளார். ஆனால், ரம்யாவின் மரணத்தில் சந்தேகம் […]