இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் (EU) இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.. இது இரண்டு பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும் என்றும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று உறுதிப்படுத்தினார். இந்த நிகழ்வு அமெரிக்காவை கலக்கமடையச் செய்ததாகத் தெரிகிறது. […]

தற்போது அனைவரும் தங்கம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், 1 சவரன் தங்கத்தின் விலை இப்போது ரூ.1,20,000ஐ நெருங்கிவிட்டது… வரும் காலத்தில் தங்கத்தின் விலை 2 லட்சத்தைத் தாண்டும் என்று நிபுணர்கள் உறுதியாகக் கணித்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தங்கப் பிரியர்களுக்கு மோடி அரசு சில நல்ல செய்திகளை வழங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் வலுவாக உள்ளன. 2026-27 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக, தங்கம், நகை மற்றும் சுரங்கத் துறை நிபுணர்கள் அரசிடம் இருந்து […]

சுதந்திர இந்தியாவின் நிதி வரலாற்றை எழுதும் போது, அதில் ஒரு தமிழரின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது அவசியம். பலரும் அறிந்திராத ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமை ஒரு தமிழரையே சாரும். கோயம்புத்தூரின் மைந்தரான ஆர். கே. சண்முகம் செட்டி தான், 1947 நவம்பர் 26 அன்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தார். அன்றைய […]

நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), தற்போது நாடு முழுவதும் காலியாக உள்ள 394 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தங்களது தொழில்முறை பயணத்தை தொடங்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ அல்லது சம்பந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ (Diploma), பட்டப்படிப்பு […]

நாட்டில் லட்சக்கணக்கான பிஎஃப் கணக்குதாரர்கள் உள்ளனர். அவர்கள் பிஎஃப், இபிஎஃப், ஜிபிஎஃப் போன்ற அரசு சேமிப்புத் திட்டக் கணக்குகளை வைத்துள்ளனர். அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் மத்திய அரசு பல முடிவுகளை எடுக்கிறது. பிஎஃப் இருப்பின் மீது ஆண்டுதோறும் வட்டி வழங்குவதோடு, ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியமும் வழங்குகிறது. காப்பீடு போன்ற வசதிகளையும் வழங்குகிறது. இதுவரை, இத்தகைய கணக்குகளை வைத்திருப்பவர்கள் இறந்தால், அந்தப் பணத்தை குடும்ப உறுப்பினர்கள் பெறுவதற்கான செயல்முறை மிகவும் கடினமாக […]

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் கண்ணிவெடித் தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ்தர் சரகத்தின் கீழ் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் ஒரு பெரிய என்கவுண்ட்டர் நடந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த கண்ணிவெடித் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஜனவரி 17 […]

கர்நாடகாவின் துமகுரு மாவட்டம் நெலாஹால் அருகே தேசிய நெடுஞ்சாலை 48 இல் இன்று ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.. பெங்களூரை சேர்ந்த 6 பேரை ஏற்றிச் சென்ற மாருதி எர்டிகா, நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கோகர்ணா, முருதேஷ்வர் மற்றும் உடுப்பிக்கு ஒரு பயணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, இந்த பயங்கர விபத்து நடந்தது, இது பரபரப்பான நெடுஞ்சாலைகளில் சோர்வு மற்றும் […]

நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. தேசிய தலைநகரில் குடியரசு தின கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க இந்தியா கேட் அருகே உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து சாரட் வண்டியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டார். பின்னர் 77-வது குடியரசு தின […]

77வது குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி என்ன உடை அணிந்திருந்தார் என்பதையே பலரும் கவனித்துக் கொண்டிருந்தனர். பாரம்பரியம், உள்ளூர் கலாச்சாரம் மற்றும் நவீன ஃபேஷன் ஆகியவற்றை அவர் ஒருங்கிணைத்த தோற்றம் அனைவரின் பார்வையையும் கவர்ந்தது. முக்கியமாக கவனம் பெற்றது அவரது ராஜஸ்தானி தலைப்பாகை அதாவது டர்பன். அதில் பிரகாசமான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் இருந்தது. மேற்கு இகிந்தியாவில் இந்த நிறங்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கும். […]