நாடு முழுவதையும் உலுக்கிய ஒரு பெரிய மோசடியை டெல்லி காவல்துறை அம்பலப்படுத்தியுள்ளது. தோலேராவில் முதலீடு என்ற பெயரில் ரூ.2,700 கோடி மோசடி செய்த கும்பல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான ஜுகல் கிஷோர் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். தோலேரா ஸ்மார்ட் சிட்டி என்பது குஜராத்தில் பாவ்நகர் மற்றும் அகமதாபாத்தை இணைக்கும் சமீபத்திய திட்டங்களில் ஒன்றாகும். இந்தநிலையில், குஜராத்தின் தோலேராவில் முதலீட்டில் அதிக லாபம் தருவதாக வாக்குறுதி அளித்து, […]

வெளிநாட்டு தூதரகங்கள் அல்லது வெளிநாடுகளில் சமர்ப்பிக்கப்படும் இந்திய குடிமக்களின் ஆவணங்களை சரிபார்த்து சான்றளிப்பதற்காக தேசிய தகவல் மையத்துடன் இணைந்து வெளியுறவு அமைச்சகம் இ-சனத் என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளை அலுவலகத் தலைவர்; இந்தத்தளத்தில் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி விளக்கினார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு இணையவழியில், முகமற்ற, பணமில்லா மற்றும் காகிதமில்லா ஆவண […]

குஜராத்தில் பானிப்பூரி மீதான மோகத்தால், பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் பானிப்பூரி மீதான மோகம் அனைவருக்கும் தெரியும். சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படி பானிப்பூரி மீது கொண்ட அதீத விருப்பமுள்ள ஒரு பெண், 2 பானிப்பூரி கம்மியா கொடுத்ததை காரணம் காட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளார். அதாவது குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சுர்சாகர் […]

ஈரானில் இந்தியர்களைக் கடத்துவதற்கான போலி வேலைவாய்ப்புச் சலுகைகள் தொடர்பான பல வழக்குகள் பதிவாகியதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக, இந்தியாவை சேர்ந்த பலர், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான வாக்குறுதிகளாலும், அல்லது பிற நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பப்படுவீர்கள் என்ற ஆசவார்த்தைகளை கூறியும் ஈரானுக்குப் பயணிக்கத் தூண்டப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.ஈரானை அடைந்ததும், இந்த இந்தியர்கள் குற்றவியல் கும்பல்களால் கடத்தப்பட்டு, அவர்களை விடுவிக்க அவர்களுடைய குடும்பங்களிடமிருந்து […]

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நம்போல் சபால் லெய்கை என்ற இடத்தில், அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் குறைந்தது 2 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர். இம்பாலில் இருந்து 407 டாடா வாகனத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​மாலை 6 மணியளவில் நம்போல் காவல் நிலையப் பகுதியில் […]

மும்பை நகரின் கோரேகான் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர், அருகில் உள்ள பள்ளியில் படித்து வரும் நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி வழக்கம்போல, தனது பாட்டியுடன் பள்ளிக்கு சென்றார். ஆனால், பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய சிறுமி, திடீரென பிறப்புறுப்பில் வலி இருப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு […]

மத்தியப்பிரதேச மாநிலம் ஜாவ்ரா பகுதியைச் சேர்ந்த ஹினா கான் என்ற 25 வயது இளம்பெண், கடந்த 2023ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி 10 மாதங்களில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இவரின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்ட நிலையில், கணவரின் உடல்நலக்குறைவால் அனைத்தும் முடங்கிப்போனது. இந்நிலையில் தான், வீட்டில் தனியாக இருந்த ஹினாவை, அவரது கணவரின் இரு சகோதரர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இரவில் […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது இளைய சகோதரியை விட 2 வயது இளையவளான ப்ரீத்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீது தீராத காதல் கொண்டிருந்த விபேஷ் என்பவர், ஒரு தவறான கற்பனையால் உயிரை இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் விபேஷ் தனது தாய்மாமன் வீட்டிற்கு சென்றபோது, ப்ரீத்தி குளியலறைக்கு வாழைப்பழம் எடுத்துச் […]

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வேடிக்கை வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது.. ஒரு கணவன் மனைவி நடு ரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட இணையத்தில் வைரலாகி வருகிறது.. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.. வளையல் கடைக்கு வெளியே அமர்ந்திருந்த தனது கணவரை எட்டி, உதைத்து, சரமாரியாக தாக்குவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இதனால் நெரிசலான சந்தையை […]

EPFO, உறுப்பினர்கள் தங்கள் பாஸ்புக் மற்றும் தொடர்புடைய சுருக்கமான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்புகள், திரும்பப் பெறுதல்களை எளிதாகச் சரிபார்க்க உதவும் வகையில் ‘பாஸ்புக் லைட்’ (Passbook Lite) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பாஸ்புக் லைட் என்பது உறுப்பினர் போர்ட்டலிலேயே செயல்படுத்தப்பட்ட ஒரு எளிய மற்றும் வசதியான வடிவமாகும். தற்போது, ​​உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகள் மற்றும் முன்பணம் அல்லது திரும்பப் பெறுதல்கள் […]