மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் எதிர்பார்த்திருந்த அகவிலைப்படி (DA) உயர்வு, ஜூலை மாதத்தில் 4% வரை இருக்கலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உள்ள 55% DA, இந்த உயர்வுடன் 59% ஆக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்தில், ஊழியர்களுக்கான முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத DA/DR நிலுவைத் தொகையை வழங்குவது பற்றியும் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி கடந்த 21-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். பொதுவாக ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ. இறந்துவிட்டால், அந்த தொகுதி தேர்தல் ஆணையத்தால் காலியானதாக அறிவிக்கப்படும். 6 மாதங்களுக்குள் […]
ஆகஸ்ட் 15, 2025 அன்று தொடங்கப்படும் FASTag வருடாந்திர பாஸ், நெடுஞ்சாலை பயணத்தை மிகவும் மலிவு விலையிலும் தொந்தரவு இல்லாததாகவும் மாற்றும் மத்திய அரசின் ஒரு முயற்சியாகும்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்த இந்த திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) செயல்படுத்த உள்ளது. இந்த ப்ரீபெய்டு டோல் திட்டம், தனியார் வாகன உரிமையாளர்கள் ரூ. 3,000 என்ற நிலையான கட்டணத்தில் 200 கட்டணமில்லா பயணங்களைப் பெற […]
பாதுகாப்பான தகவல்தொடர்புக்கான புதிய தளமாக விளங்கும் குவாண்டம் தகவல்தொடர்பு தொழில்நுட்பம், இந்தியாவில் வேகமாக வளர்ச்சி பெறுகிறது. இந்த துறையில், இந்தியா 2030க்குள் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி நீண்ட தூரங்களில் பாதுகாப்பான குவாண்டம் தொடர்பு ஏற்படுத்தும் திறனைப் பெறும் என, IIT டெல்லி பேராசிரியர் பாஸ்கர் கன்சேரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அண்மையில், IIT டெல்லி குழு ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் குவாண்டம் விசை விநியோகம் நிகழ்த்தியுள்ளது. இது, இணைக்கும் கேபிள்கள் இல்லாமல், இந்தியாவில் […]
கேரள மாநிலத்தில், சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகளின் வீடுகளில், போலீசார் இரவில் வாரண்ட் இல்லாமல் நுழைவதைத் தடை செய்யும் வகையில், கேரள உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதி வி.ஜி. அருண் வழங்கிய தீர்ப்பில், வீட்டின் தனித்தன்மையை காவல்துறை மதிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் காவல் துறை கையேட்டில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கேரள […]
மழை, வெள்ளம் வந்தாலும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கை தொடரும் என்றும் நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு புதிய சத்தீஸ்கரின் வளர்ச்சிப் பயணத்தில் இணையுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூர் அடல் நகரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக (NFSU) வளாகம் மற்றும் மத்திய தடயவியல் ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மழைக்காலத்தின் ஒவ்வொரு முறையும், […]
தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த சூழலில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் யமுனை ஆற்றின் நீர், பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். 24 மணி நேரத்தில் ஒருவர் 49 சிகரெட்கள் புகை பிடித்தால் எந்தளவுக்குப்பாதிப்பு ஏற்படுமோ, அதே அளவு […]
புனேவின் ஜெஹாங்கிர் மருத்துவமனை மருத்துவர்கள், 68 வயது பெண்ணின் கருப்பையில் இருந்த 18 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினர். பீகாரைச் சேர்ந்த மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்ட 68 வயதான பெண் ஒருவர், நாள்பட்ட வயிற்று வீக்கம் மற்றும் அசௌகரியத்தை அனுபவித்து வந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் சோதனை செய்த நிலையில், ஒரு பெரிய கருப்பை கட்டி இருப்பது தெரியவந்தது. சாதாரண கட்டி என்றாலும், அதன் வளர்ச்சியின் தன்மை […]
பிரதமர் நரேந்திர மோடி அரசியலைத் தாண்டி எப்போதும் செய்திகளில் இடம் பெறுகிறார். சில நேரங்களில் அவரது உடைகளுக்காகவும், சில நேரங்களில் அவரது உணவுப் பழக்கவழக்கங்களுக்காகவும், சில நேரங்களில் அவரது வாழ்க்கை முறைக்காகவும் தலைப்பு செய்திகளில் இடம்பெறுவார். இதனால் பிரதமர் மோடியின் அன்றாட வழக்கமும் வாழ்க்கை முறையும் மக்களை மிகவும் ஈர்க்கிறது. பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில், அவர் மிகவும் ஒழுக்கமான மற்றும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார். இருப்பினும், பிரதமருக்கு […]
வாக்குச் சாவடி காட்சிகளைப் பொதுவில் வெளியிடுவது வாக்காளரின் தனியுரிமையை மீறும் செயல் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடி காட்சிகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. வாக்குச்சாவடி வீடியோ காட்சிகளை பகிர்வது வாக்காளர் தனியுரிமையை மீறும் மற்றும் ஜனநாயக செயல்முறைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று உறுதியாகக் கூறியுள்ளது. காட்சிகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதாகத் தோன்றினாலும், அவை […]

