தன்னுடைய கள்ளக்காதலனுடன் தொடர்ந்து உறவில் இருக்க தடையாக இருக்கும் கணவருக்கு சூனியம் வைக்க மனைவி ரூ.59 லட்சம் வரை செலவு செய்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே அந்தேரி பகுதியைச் சேர்ந்த 39 வயதான தொழிலதிபர் ஒருவருக்கு 38 வயதில் ஒரு மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தொழிலதிபரின் மனைவி 13 ஆண்டுகளுக்கு முன்பு பரேஷ் கோடா என்பவரை காதலித்துள்ளார். திருமணத்திற்கு […]

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisor பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு Computer Science, IT பாடப்பிரிவில் MBA ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 5 ஆண்டுகள் இருக்க […]

வழக்கில் சிக்கிய கணவரை விடுவிப்பதாக கூறி, இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கொச்சி மரடு பகுதியைச் சேர்ந்தவர் சுனு. இவர் கோழிக்கோடு கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கொச்சி திருக்காக்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண், இன்ஸ்பெக்டர் சுனு உள்பட 6 பேர் மீது திருக்காக்கரை போலீசில் கூட்டு பலாத்கார புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த இளம்பெண்ணின் […]

நாட்டில் கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய் விலை இறங்கு முகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில், 60 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து வந்ததால், இந்தியாவில் எண்ணெய் விலை அதிகரித்து வந்தது. குறிப்பாக சில்லரை விற்பனையில் விலை உயர்வு எதிரொலித்தது. இதனால், சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சமீபகாலமாக எண்ணெய் விலை குறைந்து […]

பிரபல மராத்தி டிவி நடிகை கல்யாணி குராலே ஜாதவ், சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 32. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல டிவி நடிகை கல்யாணி குராலே ஜாதவ் (வயது 32), துஜ்யத் ஜீவ் ரங்களா மற்றும் தக்கஞ்சா ராஜா ஜோதிபா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் ஆவார். இவர் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, சாங்லி-கோலாப்பூர் நெடுஞ்சாலையில் ஹலோண்டி சந்திப்பு அருகே, அவரது இரு […]

பத்திரிக்கையாளர் ஜி.எஸ்.கோபிகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் காலமானார். அமிர்தா தொலைக்காட்சியின் முன்னாள் மண்டல தலைவர் ஜி.எஸ்.கோபிகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 48. கேரளா மாநிலம் எண்ணிக்கரையில் வசிக்கும் கோபிகிருஷ்ணன் ஏசிவி செய்தி மற்றும் கௌமுதி டிவியில் பணியாற்றினார். உடல் நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோபிகிருஷ்ணன் கேரள பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட இணைச் செயலாளர் […]

டெல்லியில் காற்று மாசுபாடு சிறிது குறைந்ததை அடுத்து, BS3 பெட்ரோல் வாகனங்கள் மற்றும் BS4 டீசல் கார்கள் இயக்குவதற்கான தடையை டெல்லி அரசு நீக்கியது. இன்று முதல் அனைத்து வகை வாகனங்களும் இயக்கப்படும். கட்டுப்பாடுகள் இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லி காற்றுத் தரக் குறியீட்டில் முன்னேற்றத்தைக் கவனித்து வருவதால், மெதுவாகவும் படிப்படியாகவும் அரசாங்கம் கடந்த வாரம் செயல்படுத்தப்பட்ட GRAP திட்டத்தில் மாற்றங்களைச் செய்து வருகிறது. கடந்த சில […]

மும்பை விமான நிலையத்தில் ஒரே நாளில் 32 கோடி மதிப்பில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று ஷாருக்கான் எடுத்துச் சென்ற விலை உயர்ந்த வாட்சுக்கு அபராதம் விதித்தனர். அதே போல 61 கிலோ எடையுள்ள 32 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை 7 பயணிகளிடம் பரிமுதல் செய்தனர். […]

கர்நாடகாவில் அரசு பேருந்தில் பயணித்த நபரிடம் மடிக்கணினியை எடுத்துச் சென்றதற்காக கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மக்கள் வசதிக்காக அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற. கர்நாடக மாநிலம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் தமிழகம், கேரளா, ஆந்திராவிற்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. பேருந்தில் பயணம் செய்பவர்களில் சிலர் லேப்டாப் எடுத்துச் செல்கின்றனர். இது சர்வ சாதாரணமாகிவிட்டது. பெங்களூருவில் ஐ.டி.துறையினர் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். இதனால் வெகு தூரத்தில் பயணிப்பவர்கள் லேப்டாப்பை வைத்திருக்கின்றனர். […]

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிறுநீரகத்தில் இருந்த கல்லை எடுப்பதற்காக தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபரிடம் இருந்து கிட்னி திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டம் நாக்லா தால் கிராமத்தைச் சேர்ந்தவர் 53 வயதான சுரேஷ் சந்திரா. இவர் அங்கு வீட்டுக் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு நீண்டகாலமாக அடிவயிற்றில் வலி இருந்ததை அடுத்து தனியார் மருத்துவப் பரிசோதனை மையத்தில் ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவருக்கு […]