பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்வதுடன் இலவச சானிடரி நாப்கின்களை வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளில் தேவையானோருக்கு இலவச சானிடரி நாப்கின்கள் வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜெயா தாக்கூர் என்பவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் சானிடரி […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சரிந்துள்ள சூழலில் வாய்ப்புள்ளவர்கள் வீட்டிலிருந்தே அலுவலகப் பணியை மேற்கொள்ள வேண்டுமென டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுப்புற சூழல் அமைச்சர் கோபால் ராய், ”வாகன மாசுபாட்டை குறைக்க மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். அரசியல் மூலம் காற்று மாசு பிரச்சனைக்கு தீர்வு காண […]
பாரத ஸ்டேட் வங்கி மியூச்சுவல் ஃபண்ட் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். Relationship Manager பணிக்கு தேர்வு […]
போதைக்கு அடிமையாகி பணத்துக்காக தங்களை அடித்து துன்புறுத்திய மகனை, கூலிப்படைக்கு ரூ. 8 லட்சம் கொடுத்து பெற்றோரே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள கம்மம் நகரை சேர்ந்தவர் க்ஷத்திரிய ராம்சிங்- ராணிபாய் தம்பதி. ராம்சிங் அங்குள்ள தனியார் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு சாய்ராம் (26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளார். மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். […]
பிரபல பெண் சமூக ஆர்வலர் எலாபென் பட் காலமானார். புகழ்பெற்ற பெண் சமூக ஆர்வலர், காந்தியவாதி மற்றும் சுயதொழில் பெண்கள் சங்கத்தின் நிறுவனர் எலாபென் பட், குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் காலமானார். நல்ல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு 89 வயது. எலாபென், நிறுவிய காந்தியவாதி மற்றும் சுயதொழில் பெண்கள் சங்கம் மிகப்பெரிய பெண்கள் கூட்டுறவு மற்றும் […]
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் […]
ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பெண்ணை கண நொடியில் காப்பாற்றிய ஊழியருக்கு பாராட்டுக்கள் குவித்து வருகின்றது. உத்தரபிரதேச மாநிலத்தில் அமேதி ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நடைமேடைக்கு ரயில் வந்து நின்றுள்ளது. பின்னர் புறப்பட்டவுடன் அந்த ரயிலில் ஏற வந்த பெண் கடைசி படிக்கட்டில் கால்வைத்தபோது ஸ்லிப் ஆகி கீழே விழுந்தார். ஓடிக் கொண்டிருந்த ரயிலுக்கும் நடை மேடைக்கும் இடையே சிக்கிக் […]
மஹாராஷ்டிராவில் அரசு பேருந்து தீப்பிடித்த நிலையில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில்இருந்து யவாத்மால் என்ற பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து அவுரங்காபாத்தை நெருங்கியது. அப்போது பேருந்தின் எஞ்சினில் திடீரென புகை வந்துள்ளது. இதை கவனித்த பேருந்து ஓட்டுனர் பயணிகளை விரைவாக கீழே இறங்க அறிவுறுத்தினார். உடனடியாக அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்த நொடியே திகு திகுவென தீபபிடித்து எரியத் தொடங்கியது. […]
தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கர் பகுதியில் வசிப்பவர் ஷியாம் சிங் (25). பெற்றோரை இழந்த இவர் சோனிபட் மயூர் விஹாரில் உள்ள தனது அத்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு, கோஹானா கிராமத்தை சேர்ந்த அஞ்சலி (23) என்ற பெண்ணுடன் சில நாட்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அஞ்சலி, […]
பாலம் விபத்தில் ஒரேவா நிறுவனத்தின் மேலாளர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிபதியிடம் இந்த விபத்து கடவுளின் விருப்பம் என பதில் அளித்துள்ளது மக்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கும் பாலம் அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 141 பேர் உயிரிழந்த நிலையில் 170 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாலத்தை பராமரித்த ’ஒரேவா’ என்ற […]