CSB வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Regional Sales Manager – Gold Loan பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என மொத்தம் 17 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. பணிகளில் குறைந்தது 5 ஆண்டு வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் […]

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் OYO ஹோட்டல்களின் அறைகளில் தம்பதிகள் தனியாக இருக்கும் நிகழ்வுகளை படம்பிடிக்கும் நோக்கில் யாரும் கண்டறிய முடியாத கேமராக்கள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். OYO ஹோட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்து தங்கியிருந்த ஒரு கும்பல் யாரும் கண்டறிய முடியாத கேமராக்களை வைத்திருந்து விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், OYO ஹோட்டல்களில் மர்ம கும்பல் […]

காதலை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில் காதலியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் மனந்தரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஷம்ஜித் (25). கன்னூர் மாவட்டம் வாழ்யாயில் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் விஷ்ணுபிரியா (21). இவர் அதே பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் பார்மசிஸ்ட்டாக பணிபுரிந்து வந்தார். விஷ்ணு பிரியாவும், ஷம்ஜித்தும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் […]

கேரள மாநிலத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், கேரள மாநிலத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் இன்று பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு […]

தன்னைக் கூட்டு பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் பொய்யான செய்தியை உருவாக்கியதாக காசியாபாதை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழன் அன்று உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ஐந்து ஆண்களால் தான் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு மிருகத்தனமாக நடத்தப்பட்டதாக டெல்லி பெண்ணின் கூற்று “புனையப்பட்டது” என்று போலீசார் நிராகரித்துள்ளனர். மேலும் பெண்ணின் கூட்டாளிகளான ஆசாத், அப்சல், கௌரவ் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு […]

நிர்வாண பூஜை தொடர்பாக இளம்பெண் ஒருவர், கணவர் மற்றும் மாமியார் மீது புகார் அளித்திருந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சத்யபாபு (36) என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மூட நம்பிக்கைகளில் அதீத நம்பிக்கை கொண்ட சத்யபாபு குடும்பத்தினர், திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில் அவர்களது வீட்டிற்கு […]

சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒடிசா அரசு அக்டோபர் 25-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்கும்போது, அதனை முழு சூரிய கிரகணம் என அழைக்கின்றனர். வருகிற 25-ம் தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் 8-ம் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ம் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி […]

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மதர்சாவில் படிக்கும் 5 வயது சிறுமியை மௌலவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கங்கா காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மௌலவி அப்துல் ரஹீமைக் கைது செய்தனர். மாவட்டத்தில் உள்ள சுக்லா கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள பாகராசியை சேர்ந்த மௌலவி அப்துல் […]

தற்காலிகமாக அரசு பணியில் வேலை பார்ப்பவர்களுக்கும் போனஸ் அறிவித்துள்ளது மத்திய அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசுகள் மற்றும் போனஸ் அறிவிப்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்திதிறன் இல்லா போனஸ்களை ( அட்-ஹாக்) போனஸ் எனப்படும் மத்திய அரசு போனஸ் அறிவித்துள்ளது. 2021-2022நிதியாண்டிற்கான தற்காலிக போனஸ் செலுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமான தொகை ஆகும்.அக். 6 .2022ல் வெளியிடப்பட்ட […]

சிக்கன் சமைப்பதில் கணவன் மனைவியிடையே நடந்த தகராறை தீர்க்க வந்த நபர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் பில்கிரியா காவல்நிலையத்திற்குள்பட்ட சவானி பதார் கிராமத்தில் வசித்துவந்தவர்கள் பப்பு அஹிர்வார் மற்றும் அவரது மனைவி.சிக்கன் வாங்கிக் கொண்டு வந்த கணவர் செவ்வாய்க்கிழமையன்று மனைவியை சிக்கன் சமைத்து தரக் கோரி வற்புறுத்தியுள்ளார். இதில் கணவருக்கும் மனைவிக்கு தகராறு முற்றியுள்ளது. இருவரும் அடித்துக் கொண்டனர். பக்கத்து வீட்டியில் குடியிருந்த நபர் ஒருவர் இருவருக்கு […]