புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மருத்துவ படிப்பை தமிழ் மொழியில் வழங்க இருப்பதாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நாட்டில் கல்வியை மாணவர்கள் அனைவரும் தங்களின் தாய்மொழியில் கற்கும்போது தான் அதன் முழு சாரம்சத்தையும் புரிந்து சிந்திக்க முடியும் என்று பல அறிஞர்களும் கூறுகின்றனர். அதனால், பல மாநிலங்களில் கல்வி வாரியங்களும் தங்களின் மாணவர்களுக்கு தாய்மொழிவைக் கல்வியை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. அந்த வகையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முதன் […]

ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக 4ஆம் வகுப்பு சிறுமி ஒருவர் தனது ரத்தத்தை விற்க முயன்ற சம்பவம் மேற்குவங்கத்தில் அரங்கேறியுள்ளது. மேற்குவங்க மாநிலம் தாபானைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு சிறுமி ஒருவர், தனது கிராமத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலூர்காட் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் சிறுமி அங்கு உள்ள ரத்த வங்கிக்கு சென்று ரத்தம் விற்க விரும்புகிறேன் என கூறியுள்ளார். இதை கேட்டு ரத்த வங்கியில் இருந்த […]

மத்திய மேற்கு வங்கக்கடலில் ‘சிட்ரங்’ புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் புயலாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் […]

இந்தி தேர்வில் தோல்வியடைந்ததால் பள்ளி மாணவனை, ஆசிரியர் பிரம்பால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்த பாடல்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன், அதே பகுதியிலுள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரது வகுப்பு ஆசிரியர் ஷோபரன் (42). அந்த மாணவன் சமீபத்தில் நடந்த இந்தி தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மாணவனை கண்டிப்பதற்காக ஆசிரியர் ஷோபரன் பிரம்பால் தாக்கியுள்ளார். […]

பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மீண்டும் பெங்களூரு நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன் வரலாறு காணாத கனமழை பெய்ததால், பெங்களூரு நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில், தற்போது பெங்களூருவில் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில், மீண்டும் பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் […]

பாலியல் பலாத்கார வழக்கில் அந்தமான் நிக்கோபார் தீவு மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்திர நரேனை சஸ்பெண்ட் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த ஆண்டு மார்ச் முதல் கடந்த ஜூலை மாதம் வரை தலைமைச் செயலராக இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்திரா நரேன். அதன் பின்னர் அவர் டெல்லியில் உள்ள நிதி கழகத்தில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்தார். அவர் தலைமைச் […]

பண்டிகை காலத்தை முன்னிட்டு 211 சிறப்பு ரயில்களை இயக்குகிறது மத்திய ரயில்வே அமைச்சகம் தற்போது பண்டிகை காலம் என்பதால், பொதுமக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை குறைக்கவும் கூடுதலாக இந்த ஆண்டு சத் பூஜை வரை, 211 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. தர்பங்கா, அசம்கர், சகர்சா, பகல்பூர், முசாபர்பூர், ஃபிரோஸ்பூர், பாட்னா, கதிஹார் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு எளிதான […]

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடலை கத்தியால் கீறி, கறி மசாலா தடவி அவர் துடிப்பதை பார்த்து ரசித்த கொடூர சம்பவம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தருமபுரி பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா, எர்ணாகுளம் காலடி பகுதியைச் சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் கைதான பகவல் சிங் அவரது மனைவி லைலா மற்றும் ஷாபி ஆகியோர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். இந்த […]

வரும் தீபாவளி பண்டிகைக்கு புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் இரண்டு கிலோ சர்க்கரைக்கு பதிலாக அரசு ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு சமமான தொகை அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் […]

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே இன்று ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், ருத்ரபிரயாக்கில் உள்ள கருட் சட்டி அருகே உள்ள கேதார்நாத் கோவிலில் இருந்து காலை 11.40 மணியளவில் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளாகி உள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 6 யாத்ரீகர்கள் […]